துர்வாசர் வழிபட்ட லிங்கம் துர்வாச நாயினார் எனப் பெயர் கொண்டு பின் தூவாய நாயினார் என்றானது.
ஒரு காலத்தில் வருணன் இந்நகர் மீது அனுப்பிய கடலை வற்றச் செய்து உண்டமையால் இவ்வூர் பரவை உண் மண் தளி எனப் பெயர் கொண்டு பின்னர் பரவையுண்மண்டளி என்றானது. (பரவை - கடல்)
சங்கிலியாரை மணந்து சத்தியத்தை மீறி பிரிந்து சென்ற சுந்தரர், இழந்த இரு கண்களில் ஒன்றினை காஞ்சியில் பெற்றார். இவ்வாலயத்து குளத்தில் மூழ்கி எழுந்து இவ்விறைவனை வழிபட்டு பதிகம் பாடி மற்றொரு கண் பார்வையை சுந்தரர் பெற்றார் என ஸ்தல வரலாறு.
பரவையுண்மண்டளியின் பின்பக்கமாக திருநீலகண்ட நாயனார் கோவில் உள்ளது. பரவையார் வாழ்ந்த வீட்டில், செந்தாமரை நாறும் வீதியில் பரவை நாச்சியார் கோவில் ஒன்றும் இருக்கின்றது. அதனையடுத்து ராஜதுர்க்கை கோவில் உள்ளது.