அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில் (பொழிச்சலூர்)

God Name : அகத்தீஸ்வரர்் சிறப்பு மூர்த்தமாக சனீஸ்வர பகவான்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

திருவாரூர்

Call : +91-

நியாயாதிபதியாக செயல்பட்டு தவறு செய்பவர்களை தண்டிக்கும் பணியைச் செய்து வந்த சனி, உரிய காலத்தில் உரியவரைப் பிடிக்கும் பணியையும் செய்து வந்தார். ஒரு சமயம் ஈஸ்வரனையே பிடித்துவிட்டோம் என்று அகந்தை கொண்டதனால் சாபம் கொண்டார். சனியினால் பாதிக்கப்பட்டவர்களின் சாபம் பெரிய சுமையாக மாறி அவரை அழுத்தலாயிற்று. அதிலிருந்து விடுபட இத்தலம் வந்து சிவபெருமானை நீண்ட காலம் வழிபட்டு, தனது தோஷங்களிலிருந்து விடுபட்டு, ஈஸ்வரப் பட்டமும் பெற்று, ஆனந்தமாக கோவில் கொண்டுள்ளார் என்பதால், இவரை வழிபட நமக்கும் ஆனந்தம் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.
மூலவர்: அகத்தீஸ்வரர்் அம்பாள்: ஆனந்தவல்லி. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக அகத்தீஸ்வரர் எழுந்தருளியுள்ளார். அகத்திய மாமுனி வழிபட்ட இறைவன் என்பதால் அகத்தீஸ்வரர் எனும் திருநாமம் கொண்டார். சித்திரை மாதம் 7, 8, 9 ஆகிய தினங்களில் சூரிய பகவானின் ஒளிக்கதிர்கள் சுவாமி மீது படர்ந்து சூரிய பூஜை செய்கின்றன. இச்சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. தெற்கு பார்த்த தனி சந்நிதியில் அம்பாள் ஆனந்தவல்லி எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். சிறப்பு மூர்த்தமாக சனீஸ்வர பகவான் எழுந்தருளி பக்தர்களை ரட்சிக்கின்றார். இங்கு அனுக்ரஹ மூர்த்தியாக விளங்குகிறார். சம்ஹார மஹா கால பைரவர் எழுந்தருளி தரிசனம் தருகின்றார். இது சென்னையிலுள்ள நவகிரக ஸ்தலங்களுள் சனீஸ்வரர் ஸ்தலமாகும்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.