ஸ்ரீ ராம பஜனை மந்திரம் (கேட்ட வரம் பாளையம்)
God Name : பட்டாபிஷேக ராமர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
வேலூர்
Call : +91-
இவ்வூரைச் சேர்ந்த ருக்மணி அம்மாள் என்பவர், பஜனை மடத்திற்குத் தேவையான இடத்தை வழங்கினார். செங்கல்வராயர் என்பவர், தஞ்சாவூர் ஓவியமான ராமர் பட்டாபிஷேகப் படத்தைக் கொடுத்தார். அம்மூர் ஸ்வாமிகள் எனப்படும் ஸ்ரீநிவாச அய்யங்கார் பஜனையைத் தொடங்கி வைத்தார்.
ஸ்ரீ ராம பஜனை மந்திரம் எனும் இந்த மண்டபத்தில், பட்டாபிஷேக கோலத்தில் அருளும் அழகிய ராமரை சேவிக்கலாம். ஊருக்கு வரும் பக்தர்கள் தங்குவதற்கு ஸ்ரீராம பட்டாபிஷேக மண்டபம் கட்டியுள்ளனர். பஜனை மண்டபத்தின் பிரதான பகுதியை மண் தரையாகவே வைத்துள்ளனர். இரண்டாயிரம் பேருக்கு மேல் கல்யாண சாப்பாடு போடுகின்றனர். அக்ரஹாரத்தின் ஒவ்வொரு திண்ணையிலும், தினமும் மாலை வேளைகளில், நாம சங்கீர்த்தனம் செய்து வந்த பக்தர்கள், அதை ஒரு வைபவமாக கொண்டாட ஆசை கொண்டு, அதற்கான பணிகளில் முயற்சியில் உருவான மண்டபம் இது. இவ்வூரில் நாம சங்கீர்த்தனை, பஜனை, உஞ்சவிருத்தி சம்ப்ரதாயம் தொடர்ந்து நடைபெறுகிறது. ஒவ்வொரு வீட்டிலும் பஜனை கோஷ்டிக்கு பாதங்கள் அலம்பி மஞ்சள் குங்குமமிட்டு வணங்குகின்றனர். அரிசி பிக்ஷை தருகின்றனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.