அருள்மிகு பஞ்சமுக சிவாலயம், முகப்பேர்
God Name : புத்திர காமேஸ்வரர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
Call : +91-
மூலவர்: புத்திர காமேஸ்வரர்் அம்பாள்: காமேஸ்வரி.
மூலஸ்தானத்தில் புத்திர காமேஸ்வரர் சிவலிங்க வடிவமாக - தத்புருஷம், வாமதேவம், அகோரம், சத்யோஜாதம் - எனும் ஐந்து முகங்களுடன் எழுந்தருளி தரிசனம் தருகின்றார். ஸ்ரீ காசி மடத்தால், காசியிலேயே உருவாக்கப்பட்ட லிங்கம்.
படைத்தல், காத்தல், அருளுதல், மறைத்தல், அழித்தல் ஆகிய ஐந்து தொழில்களை நடத்துபவர் சிவபெருமான் என்பதால், ஐந்து முகங்களைக் கொண்ட சிவலிங்கமாக ஸ்தாபித்து உள்ளனர்.
மூலஸ்தான வாசலில் ஞான கணபதியும் ஞான ஸ்கந்தனும் இடம் பெற்றுள்ளனர். கையில் ஓலைச்சுவடியுடன் ஸ்ரீ வித்யா மஹா கணபதி.
காமாட்சியின் வடிவினளாக காமேஸ்வரி தனி சந்நிதி கொண்டுள்ளார். திருவடியின் கீழ், பூரண மஹாமேரு அமைக்கப்பட்டு ஆராதிக்கப்படுகிறது.
வெண்பளிங்கு கல்லால் உருவாக்கப்பட்ட அஷ்டபுஜ துர்க்கை, தட்சிண காளி, கால பைரவர், வடுக பைரவர், ஐயப்பன், உச்சிஷ்ட கணபதி என அநேக மூர்த்தங்களை தரிசிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.