அருள்மிகு தவளேஸ்வரர் திருக்கோவில் (காஞ்சி)
God Name : இலகுளீஸ்வரர் எனப்படும் தவளேஸ்வரர் மற்றும் இரண்யேஸ்வரர்
Call : +91-
இலகுளீசம்:
சுவேதன், சுவேதகேது, சுவேதசீகன், சுவேததாச்சுவன், சுவேதலோகிதன், சுதாரன், துந்துமி ஆகிய எழுவரும் யோகாசார்யா என்னும் பதவியைப் பெற, காஞ்சி நகரம் வந்து தத்தம் பேரில் சிவலிங்கம் அமைத்து வழிபட்டனர். அவற்றுள் இலகுளீசம் ஒன்றே நல்ல நிலையில் உள்ளது.
இரண்யேசம்:
இவ்விறைவனை இரண்யன் வழிபட்டு சாகாவரம் வேண்டிப் பெற்றதாக வரலாறு. ஆகாயம் மற்றும் பூமி ஆகிய இடங்களிலும், வீட்டிற்கு உள்ளே அல்லது வெளியேயும், தனக்கு சாவு நேரக் கூடாதெனவும், மனிதராலும், மிருகங்களாலும், மற்ற உயிரினங்களாலும் தனக்கு சாவு நேரக் கூடாதெனவும் வரம் வேண்டிப் பெற்றதாக ஸ்தல வரலாறு கூறுகிறது.
இலகுளீசம்:
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் இலகுளீஸ்வரர் எனப்படும் தவளேஸ்வரர்.
சிறிய திருமேனியுடன் தரிசனம் தரும் அழகிய லிங்க மூர்த்தம்.
இரண்யேசம்:
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் இரண்யேஸ்வரர். 16 பட்டைகளுடன் கூடிய பெரிய சிவலிங்க மூர்த்தம். இரண்யன் வழிபட்டதால் மூலவர் இரண்யேஸ்வரர் எனப்படுகிறார்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.