திருப்போரூர் மலைக்கோவில் கைலாஸநாதர் திருக்கோவில்
God Name : கைலாஸநாதர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
திருவாரூர்
Call : +91-
முருகப் பெருமான் கோவிலுக்குப் பின்புறமாக உள்ள மலை பிரணவ மலை எனப்படும். பிரணவம் முருகரை பூஜித்து இம்மலை வடிவாய் நிற்கிறது என ஸ்தல புராணம் கூறுகின்றது.
திருமாலும் திருமகளும், கண்வ முனிவரால் பெற்ற சாபத்தை, கைலாஸநாதரையும் பாலாம்பிகையையும் பூஜித்து, சாபம் நீங்கப் பெற்றதாக ஸ்தல வரலாறு கூறுகிறது. மலைச்சாரலில் திருமகள் வேப்ப மரமாக நிற்பதாக ஐதீகம்.
மரத்தடியில் வேம்படி விநாயகர் எழுந்தருளி ஆசி வழங்குகின்றார்.
சூரபத்மனை சம்ஹாரம் செய்த தோஷம் நீங்க முருகன் இவ்விறைவனை பூஜித்ததால், இவருக்கே முதல் பூஜை நடக்கின்றது.
மூலவர்: கைலாஸநாதர், அம்பாள்: பாலாம்பிகை.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக கைலாஸநாதர் எழுந்தருளியுள்ளார். அன்னை பாலாம்பிகை உடன் எழுந்தருளி தரிசனம் தருகின்றார். ஸ்வாமி, அம்பாள் இருவரும் கிழக்கு நோக்கி காட்சி தருகின்றனர்.
பிரகார வலச்சுற்றில் காசி விஸ்வநாதர், வீரபத்ரர், சூரியன் ஆகியோரின் திருவுருவங்களையும் சிதம்பர ஸ்வாமிகளின் படத்தையும் தரிசிக்கலாம்.
பஸ் ஸ்டாண்டின் பின்புறமாகச் சென்று, வலது புறம் திரும்பினால் மௌன ஸ்வாமிகளின் ஜீவ சமாதியை தரிசிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.