அருள்மிகு சந்த்ரமௌலீஸ்வரர் திருக்கோவில் (அருங்குன்றம்)
God Name : சந்த்ரமௌலீஸ்வரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
Call : +91-
இந்த ஆலயத்திற்கு விஜயம் செய்த காஞ்சி மஹா பெரியவர் இவ்வூர் மக்களுக்கு, இந்த மலையைப் பற்றியும், அதன் மீதுள்ள சந்த்ரமௌலீஸ்வரர் கோவிலைப் பற்றியும், விளக்கிக் கூறினார். 108 சிவலிங்கங்களுள் பிரதானமானவர் சந்த்ரமௌலீஸ்வரர் என்றும், 18ஆம் நூற்றாண்டின் போரில், அதை எதிரிகள் சிதைத்து விட்டதைப் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார். இதன் பின்னரே, இவ்வூர் மக்கள் மலை மீது ஏறிச்சென்று சிதைந்த ஆலயத்தைக் கண்டுபிடித்து, புதுப்பித்து, வழிபட ஆரம்பித்தனர் என்று கூறப்படுகிறது.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளி அருள் புரிபவர் சந்த்ரமௌலீஸ்வரர். பெரிய பாணமும், அழகான ஆவுடையாரும் கொண்டு தரிசனம் தருகின்றார். தெற்கு நோக்கிய தனி சந்நிதியில் அம்பாள் திரிபுரசுந்தரி எழுந்தருளியுள்ளார். கணபதி, முருகன் சந்நிதிகள் ஆகம முறைப்படி அமைக்கப்பட்டுள்ளன. பிராம்மி மற்றும் சாஸ்தா ஆகியோரின் திருவுருவங்கள் அழகாக இருக்கின்றன. இவ்வூரின் நடுவில் உள்ள சிவாலயத்தில் மூலவராக தர்மேஸ்வரரும், அம்பாள் விசாலாட்சியும் எழுந்தருளியுள்ளனர். இந்த ஆலயத்திற்கு விஜயம் செய்த காஞ்சி மஹா பெரியவர் இவ்வூர் மக்களுக்கு, இந்த மலையைப் பற்றியும், அதன் மீதுள்ள சந்த்ரமௌலீஸ்வரர் கோவிலைப் பற்றியும், விளக்கிக் கூறினார். 108 சிவலிங்கங்களுள் பிரதானமானவர் சந்த்ரமௌலீஸ்வரர் என்றும், 18ஆம் நூற்றாண்டின் போரில், அதை எதிரிகள் சிதைத்து விட்டதைப் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார். இதன் பின்னரே, இவ்வூர் மக்கள் மலை மீது ஏறிச்சென்று சிதைந்த ஆலயத்தைக் கண்டுபிடித்து, புதுப்பித்து, வழிபட ஆரம்பித்தனர் என்று கூறப்படுகிறது. இவ்வூரில் பொன்னி அம்மன் கோவில் ஒன்றும் இருக்கின்றது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.