அருள்மிகு ஸ்ரீ ஹயக்ரீவப் பெருமாள் திருக்கோவில் (மதுரை)

God Name : ஸ்ரீ ஹயக்ரீவப் பெருமாள்

திருக்கழுக்குன்றம் கோவில்

திருநெல்வேலி

Call : +91-

திருவஹீந்திரபுரத்திற்குச் சென்ற ஸ்வாமி தேசிகன், அங்குள்ள ஒளஷதகிரியில் அஸ்வத்த விருட்சத்தின் கீழமர்ந்து கருட மந்திரத்தை இடைவிடாது ஜபித்தார். பிரத்யட்சமான கருடன் ஹயக்ரீவ மந்திரத்தை அவருக்கு உபதேசம் செய்தார். அந்த மந்திரத்தைக் கொண்டு ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவரை உபாசித்தார் ஸ்வாமி தேசிகன். இதனால் மகிழ்ச்சியுற்ற ஸ்வாமி, திருமுக மண்டலம் மட்டும் குதிரை வடிவமாகக் கொண்டு ஸ்ரீ ஹயக்ரீவனாக சேவை சாதித்தார் என புராண வரலாறு கூறுகிறது. 'ஹய' என்றால் குதிரை. வெண் புரவியின் திருமுகம் கொண்டவர் ஹயக்ரீவப் பெருமான்.
மூலஸ்தானத்தில் மூலவராகவும் உற்சவராகவும் ஸ்ரீ ஹயக்ரீவப் பெருமாள் எழுந்தருளி சேவை சாதிக்கிறார். வடக்கு நோக்கிய கோவில். மதுரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள், ஏராளமான மாணவர்கள் வழிபடுகின்றனர். ஹயக்ரீவர் ஸ்லோகம்: சங்க சக்ர கதா பத்ம சார்ங்க பாசாஸி தாரிணம் .. .. ஞானாதி புஸ்தகதரம் ஹயானன மஹம் பஜே ஹயக்ரீவர் காயத்ரி: ஓம் வாகீஸ்வராய வித்மஹே ஹயக்ரீவாய தீமஹி தன்னோ ஹம்ஸஹ் ப்ரசோதயாத் கடலைப் பருப்பு - வெல்லம் - தேங்காய் துருவல் - நெய் - ஏலக்காய் பொடி சேர்த்து செய்த சுண்டல் உடுப்பி ஸோதே மடத்தில் ஹயக்ரீவருக்கு நைவேத்தியமாக செய்யப்படுகிறது. இது ஹயக்ரீவ பண்டி என்று அழைக்கப்படுகிறது.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.