அருள்மிகு ஸ்ரீ ரங்கநாதர் திருக்கோவில் (தேரழுந்தூர்)
God Name : மூலவர் ஸ்ரீ ரங்கநாதர், உற்சவர்: ஸ்ரீ ரங்கநாதர்
திருக்கழுக்குன்றம் கோவில்
பெரம்பலூர்
Call : +91-
மூலவர் ஸ்ரீ ரங்கநாதர் சேஷசயனமாக, தெற்கே சிரசை வைத்து, வடக்கே திருவடிகளை நீட்டி, கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு, சயனித்துள்ளார். சிரசின் மேல்பக்கம் ஸ்ரீ தேவியும், திருவடிகளருகே பூதேவியும் இடம் பெற்றுள்ளனர்.
உற்சவ ரங்கநாதர் சதுர்புஜங்களுடன் கூடிய எழிலார்ந்த திருமேனியுடன் சேவை சாதிக்கின்றார். தேவியர்கள் உடன் உள்ளனர். மற்றைய உற்சவர்களாகக் காட்சி தரும் ரங்கநாயகித் தாயார், ஆண்டாள், சந்தானக் கண்ணன் ஆகியோரை சேவிக்கலாம்.
தனி சந்நிதி ஒன்றில் ஸ்ரீ ராமர், லட்சுமணர், சீதா தேவி ஆகியோரை சேவிக்கலாம். கிழக்கே காணப்படும் மண்டபத்தில் எழுந்தருளி சேவை சாதிக்கும் ஆஞ்சநேயர் மிகுந்த வரப்பிரசாதி.
தனிக்கோவில் நாச்சியாராக ஸ்ரீ ரங்கநாயகித் தாயார் எழுந்தருளி சேவை சாதிக்கின்றார்.
உபரிசரவசு எனும் மன்னனுக்காக எம்பெருமான், பள்ளி கொண்ட ரங்கநாதராக சேவை சாதித்தார் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
கிருஷ்ணாரண்ய க்ஷேத்திரங்களுள் ஒன்றான திருவழுந்தூர் எனப்படும் தேரெழுந்தூரில், ஆமருவியப்பன் கோவில் சந்நிதி தெருவின் நடுவில் தெற்கு பார்த்தவாறு ஸ்ரீ ரங்கநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.