தவத்திரு முத்துராமலிங்க ஞானதேசிக ஆண்டவரால் 19 ஆம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்ட மடம் இது. காரைக்குடியில் வாழ்ந்த மெய்யப்ப செட்டியார் - வள்ளியம்மை ஆச்சி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்த இவரே இம்மடத்தின் முதல் தலைவராவர். பொருள்வைத்தசேரி உகந்தலிங்க ஸ்வாமிகளிடம் வேதாந்த சாஸ்திரங்களைப் பயின்றார். பொருள்வைத்தசேரி, சிதம்பரம், திருக்களர், திருவண்ணாமலை ஆகிய இடங்களில் கிளைகள் உள்ளன. வடமொழியிலுள்ள வேதாந்த சித்தாந்த விஷயங்களை வடமொழிப் பயிற்சி இல்லாதவர்களுக்குப் புரியுமாறு பயிற்றுவிக்க நாநாஜீவ கட்டளை தொடங்கிப் பணியாற்றிய மடம் இது. மழலையர் பள்ளி, வேதகாம பாடசாலை, திருமுறைக் கல்லூரி, ஆலய அலங்காரப் பொருள் கலைக் கல்லூரி ஆகியன இம்மடத்தினரால் நடத்தப்பட்டன. மடாலயத்தின் 12வது ஆதீனகர்த்தாவாக தவத்திரு நாச்சியப்ப ஞானதேசிக ஸ்வாமிகள் தற்போது ஆண்டவராக உள்ளார். கொற்றவாளீஸ்வரர் கோவிலின் வளர்ச்சிக்குப் பாடுபட்ட மடம் இது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.