அருள்மிகு கதிகாசலப் பெருமான் திருக்கோவில் (கதித்தமலை)
God Name : கதிகாசலப் பெருமான் எனப்படும் தண்டாயுதபாணி
திருக்கழுக்குன்றம் கோவில்
Call : +91-
இரண்டு சிகரங்கள் கொண்ட சிறிய குன்று. உயரமான சிகரத்தில் முருகப் பெருமான் கோவிலும், சற்று குறைவான உயரம் கொண்ட குன்றில் வள்ளி-தெய்வயானை கோவிலும் உள்ளன. படிக்கட்டுப் பாதை இல்லை. ஒற்றையடிப் பாதைதான் இருக்கிறது. வெற்றிவேலாயுதஸ்வாமி என்று பிரசித்தம். பாத விநாயகர் மற்றும் மண்டப கணபதியை வணங்கி ஆசி பெற்று மலை ஏறுகின்றனர். மலைக் கோவிலில் முதல் தரிசனமாக சுப்பராயரை தரிசிக்கலாம். இங்கு அறுபது படிக்கட்டுக்கள் கொண்ட குன்று. மூலஸ்தானத்தில் அழகு திருவுருவமாக எழுந்தருளி அருள்பாலிக்கும் தண்டாயுதபாணி மிகுந்த வரப்பிரசாதி. பழநிமலை முருகனாகவே பாவித்து வழிபடுகின்றனர். சென்னிமலை, சிவன்மலை, கதித்தமலை, அருள்மலை, சீனாபுரம், திண்டல்மலை ஆகிய ஆறு மலைகளும் அருகருகே இருப்பதால் ஒரே நாளில் காலையில் தொடங்கி அர்த்த சாமத்திற்குள் வழிபடும் பக்தர்கள் ஏராளம். சோமவாரம், சுக்ரவாரம், கார்த்திகை, கந்த சஷ்டி, தைப்பூசம் ஆகிய விசேஷ நாட்களில் சிறப்பு பூஜைகள் நடத்துகின்றனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.