அருள்மிகு நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோவில் (காரமடை)
God Name : மூலவர்: நஞ்சுண்டேஸ்வரர், உற்சவர்: பிரதோஷ நாயகர்
திருக்கழுக்குன்றம் கோவில்
Call : +91-
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் நஞ்சுண்டேஸ்வரர். ஒளி வீசும் அழகிய செந்நிற லிங்கம். இரண்டு ஆவுடையார்கள். உற்சவ மூர்த்தியாக பிரதோஷ நாயகர் எழுந்தருளியுள்ளார். கிழக்கு நோக்கிய சன்னதி. அம்பாள் லோகநாயகி எனப்படும் உலகம்மை உடன் எழுந்தருளி அருள்பாலிக்கிறாள். மூலஸ்தானத்தைச் சுற்றி அஷ்டகஜங்கள். ஒவ்வொரு யானையின் துதிக்கையின் கீழும் வெவ்வேறு சிற்ப வடிவங்களைக் காணலாம். இராமாயண - மகாபாரதக் கதைகள் சிற்ப வடிவில் இடம் பெற்றுள்ளன. மைசூர் நஞ்சன்கூடு நஞ்சுண்டேஸ்வரர் ஆலயம் போன்றே அமைந்துள்ளது. ஸ்ரீ செண்பக விநாயகர், ஸ்ரீ நர்த்தன விநாயகர், ஸ்ரீ ஆறுமுகவேலர், ஸ்ரீ சிவதுர்க்கை, ஸ்ரீ பைரவர், ஸ்ரீ சண்டிகேஸ்வரர் ஆகிய மூர்த்தங்களைத் தரிசிக்கலாம். ஸ்ரீ நஞ்சுண்டேஸ்வரருக்கு தேனபிஷேகமும், கரும்புச் சாறு அபிஷேகமும் உகந்தது. ஐப்பசி மாதத்தில் மூலவருக்குச் செய்யப்படும் அன்னாபிஷேகம் மிக அற்புதமாக இருக்கும்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.