அருள்மிகு ரங்கநாதப் பெருமாள் திருக்கோவில் (காரமடை)

God Name : மூலவர்: ஸ்ரீ ரங்கநாதர், உற்சவர்: ஸ்ரீ ரங்கநாதர், ஸ்ரீ வெங்கடேசப் பெருமாள்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

Call : +91-

கருடாழ்வாரின் விண்ணப்பத்தை நிறைவேற்ற, ஸ்வாமி இத்தலத்தில் மஹாலட்சுமியுடன் திருமணக் கோலத்தில் சேவை சாதித்தார் என ஸ்தல வரலாறு. பின்நாளில் காரைவானத்து புதருக்குள் இருந்த ஸ்வாமியை, பசு ஒன்று பால் சொரிந்து அடையாளம் காண்பித்ததாகவும், இடையன் புதரைக் கிளரியதால் ஸ்வாமியின் திருமேனியில் வெட்டுண்ட தழும்பு காணப்படுவதாகவும், ஸ்வாமியை புதரிலிருந்து வெளிக் கொணர்ந்து பிரதிஷ்டை செய்து கோவில் எழுப்பப்பட்டதாகவும் ஸ்தல வரலாறு மேலும் கூறுகிறது. மற்றுமொரு வரலாறு பின்வருமாறு தெரிவிக்கின்றது. ஜனகாதி மகரிஷிகளின் சாபம் கொண்டு பூலோகத்தில் இடையர் குலத்தில் பிறந்தான் இந்திரன். காரமடை பகுதியில் ஆடு மாடுகளை மேய்த்து வந்தான். அவனது காராம்பசு ஒன்று தினமும் அங்கிருந்த காரைப் புதரில் பால் சொரிவதைக் கண்டு, அந்த புதரைக் கிளரலானான். அதிலிருந்து ரத்தம் பீரிட்டு வந்தது. கிளறியவன் கண் பார்வையும் போனது. வெட்டுப்பட்ட சுவடு லிங்கத்தில் தெரிகிறது. நடந்ததை குரு வேதவியாஸ பட்டரிடம் தெரிவித்தான் இடையன். அவர் இந்த புதருக்குள் சுயம்பு லிங்கமாக இருந்த ரங்கநாதரை வெளிக் கொணர்ந்தார். வந்திருப்பது தானே என ரங்கநாதர் அசரீரியாக தெரிவித்தார். சாப விமோசம் பெற்றான் இந்திரன். பின்னர் இக் கோவிலைக்கட்டி விட்டு வானுலகம் சென்றான் என கூறப்படுகிறது. வைகுண்டத்தில் நாராயணனைக் காணாது தவித்த கருடன், தான் என்ற அகந்தை கொண்டு எல்லோரிடமும் சண்டை போட்டுக் கொண்டிருந்தது. அஷ்டதிக் பாலகர்கள், அஷ்ட வசுக்கள் என ஒவ்வொருவராய் சண்டை போட்டு ஜெயித்து பூலோகம் வந்து பாலகனான கிருஷ்ணனிடம் யுத்தம் புரிந்தது. யாருடன் சண்டை போடுகிறோம் எனத் தெரிந்து கொள்ளாமல் கிருஷ்ணனை தூக்கி வீச, இந்த காரமடை பகுதியில் காரைப் புதருக்குள் வந்து வீழ்கிறார் கிருஷ்ணன். நடந்த தவற்றிற்கு மன்னிப்பு வேண்டுகிறார் கருடன். தாம் இங்கே இருக்க விரும்பியே கருடன் மூலமாக இந்த நாடகத்தை நடத்தியதாக கூறுகிறார் நாராயணன். கருட தீர்த்தம் ஒன்றை உருவாக்கி, ஸ்வாமிக்கு திருமஞ்சனம் செய்து வழிபட்டார் கருடன். லிங்கமாக ரங்கநாதர் குடியிருந்த இடத்தை தேடி கண்டுபிடிக்க வந்த மக்கள், தோல் பைகளில் தண்ணீரும், கையில் தீப்பந்தமும் எடுத்துக் கொண்டு காட்டிற்கு சென்ற சம்பவத்தை நினைவு கூர்ந்து தண்ணீர் சேவை மற்றும் பந்த சேவை ஆகியவற்றை ஐதீகமாக கொண்டாடுகின்றனர். பழம், சர்க்கரை, கடலை, நெய், திராட்சை, முந்திரி ஆகியன சேர்த்து பிசைந்து மூங்கில் கூடைகளில் தூக்கி வருவார்கள். அதற்கு கவாள சேவை என்று பெயர். இவற்றை தாசர்களுக்கு கவளம் கவளமாக கொடுப்பார்கள். ஏகாதேசிக்கு முன்தினம் ரங்கநாதர் மோகினி அவதாரக் காட்சி தருவதும், நாச்சியாருடன் சேஷ வாகனத்தில் வருவதும், அந்நாளில் சொர்க்கவாசல் திறக்கப்படுவதும், சிறப்பாக நடக்கும்.
மூலஸ்தானத்தில் - சதுர வடிவிலுள்ள ஸ்ரீ ரங்கநாதர் சுயம்புவாக பூமியிலிருந்து வெளிக் கிளம்பிய தோற்றத்தில் காட்சி தருகிறார். திருமுகத்தை மட்டும் சேவை சாதிக்கும்படி எழுந்தருளியுள்ளார். இவரது திருமேனி பூமிக்குள் இருப்பதாக ஐதீகம். அரங்க வெங்கடேசன் அச்சுதன் எனும் திருநாமமும் உண்டு. ராமபாணம் வைக்கப்பட்டுள்ளது. புற்றிலிருந்து தன்னை வெளிப்படுத்திக் கொண்ட கோலத்தில் சேவை சாதிக்கின்றார். கருவறை சுவற்றில் - வில்லினைக் கை கொண்ட ராமர், புல்லாங்குழல் வாசிக்கும் கண்ணபிரான், வீணையேந்திய பெண் ஆகிய சிற்பங்களைக் காணலாம். ஒரு அடி உயரமுள்ள இந்த சுயம்பு மூர்த்தி நான்கு பட்டைகளுடைய திருமேனியைக் கொண்டவர். திருநெற்றியில் பதித்திருக்கும் திருநாமத்தை நீக்கிப் பார்த்தால் சிவபெருமானின் திருமுகத்தை கலசமாக கொண்ட தோற்றம் தெரியும் என்பர். உற்சவ ரங்கநாதரின் திருமேனி மிகவும் எழிலானது. மேற்கரங்களில் சங்கு - சக்கரம் கொண்டும், கீழ்க்கரங்கள் அபய - வரத ஹஸ்தங்களாகவும் கொண்ட சதுர்புஜதாரியாக நின்ற திருக் கோலத்தில் சேவை சாதிக்கின்றார். ஸ்ரீ தேவி பூதேவி தேவியர்கள் உடன் உள்ளனர். தெற்கு பார்த்த சந்நிதி. மூலவரின் சந்நிதியில் சடாரி வைப்பதில்லை. ராம பாணத்தால் ஆசிர்வதிக்கின்றனர். உற்சவரின் சந்நிதியில் சடாரி சாத்துகின்றனர். மற்றைய உற்சவர்களாக சக்கரத்தாழ்வாரும், செல்வரும், கிருஷ்ணனும் சேவை சாதிக்கின்றனர். மூலவராகவும் உற்சவராகவும் ஆண்டாள் சந்நிதி கொண்டுள்ளார். ருக்மணி - சத்யபாமாவுடன் சேவை சாதிக்கும் சந்தான வேணுகோபாலர் மற்றும் ஆழ்வாராதிகளை சேவிக்கலாம். உற்சவராக வெங்கடேசப் பெருமாள் சேவை சாதிக்கின்றார். ஸ்ரீ தேவியும் பூதேவியும் இங்கு பெட்டத்தம்மன், துளசியம்மன் என்ற பெயர்களில் எழுந்தருளியுள்ளனர். பூமி தேவி - நீளா தேவி தேவியர்களுடன் பரவாசு தேவர் எழுந்தருளியுள்ளார். மேற்கே திருமுக மண்டலம் கொண்டு ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமி வடக்கு பார்த்த சந்நிதியில் எழுந்தருளியுள்ளார். கிழக்கு பார்த்த சந்நிதியில் ரங்கநாயகித் தாயார் மூலவராகவும் உற்சவராகவும் எழுந்தருளி சேவை சாதிக்கின்றார்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.