அருள்மிகு சுவாமிநாதசுவாமி திருக்கோவில் (சூலூர்)
God Name : சுவாமிநாத சுவாமி மற்றும் அறுபடை வீட்டு மூலவர்கள்
திருக்கழுக்குன்றம் கோவில்
Call : +91-
மூலஸ்தானத்தில் மூலவராக சுவாமிநாத சுவாமி எழுந்தருளியுள்ளார். கையில் வேல் வைத்துக் கொண்டு கம்பீரமாக நின்று தரிசனம் தருகின்றார். திருத்தணி, திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், பழநி, பழமுதிர்சோலை ஆகிய ஊர்களின் மூலவர்களும் வலச்சுற்றில் சந்நிதி கொண்டுள்ளனர். விநாயகப் பெருமான், நவகிரகங்கள், காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர், மற்றும் 63 நாயன்மார்கள் சந்நிதி கொண்டுள்ளனர். நவகிரக சந்நிதிகள் அழகுற அமைந்துள்ளன. மூலவருக்கு முன்னால் அமைந்துள்ள சரவணப் பொய்கை எங்கும் காண முடியாத சிறப்புடன் உள்ளது. குமரன் குழந்தையாக அவதரித்ததை சித்தரிக்கும் விதமாக அமைந்துள்ளது என்பர். 'கோவை குமரன் கோட்டம்' என்றும், 'அறுபடை வீடுகள்' என்றும் போற்றப்படும் இவ்வாலயம் ஆறாயிரம் சதுர அடி பரப்பளவில் மார்பிள் கற்கள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. சுத்தமாக பராமரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது. இக்கோவிலில் அனுமதி சீட்டு, அர்ச்சனை சீட்டு போன்றவைகள் கிடையாது. தூய தமிழில் அர்ச்சனை செய்கின்றனர். நித்ய பூஜைகள், செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜைகள் சிரத்தையாக செய்கின்றனர். ஷண்முக வேள்வி நடைபெறுவது சிறப்பம்சம். கோவை குமரன் கோட்டம் - அறுபடைவீடு.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.