ஸ்வாமி தயானந்த சரஸ்வதி ஆஸ்ரமம் (ஆனைகட்டி)
God Name : நர்மதேஸ்வரா
திருக்கழுக்குன்றம் கோவில்
Call : +91-
ஆயுஷ்ய ஹோமம், நவகிரக ஹோமம், ம்ருத்யுஞ்சய ஹோமம், சஹஸ்ரநாம பூஜை, சத்யநாராயணா பூஜை ஆகியன சேவார்த்திகளின் வேண்டுதலின்படி நடத்திக் கொடுக்கின்றனர்.
தொடர்புக்கு: ஸ்வாமி சாரதானந்தா - 94426 46710
ரிஷிகேசத்திலிருக்கும் ஸ்வாமி தயானந்த சரஸ்வதி ஆஸ்ரமத்தின் கிளையாக 1990ல் தொடங்கிய இந்த ஆனைகட்டி ஆஸ்ரமத்தில் வேதாந்தம் மற்றும் சமஸ்கிருதம் சொல்லித் தருகின்றனர். யோகா மற்றும் தியானம் செய்யவும் கற்றுத் தருகின்றனர். பகவத் கீதை, உபநிஷத் போன்றவைகளைக் கற்றுக் கொள்ளவும் ஏற்பாடுகள் செய்துள்ளனர். டிஜிட்டல் நூலகத்தில் பல நூல்களைப் பாதுகாத்து வைத்துள்ளனர். அர்ஷ வித்யா குருகுலம் உள்ளது. கோசாலையும் இருக்கின்றது.
பழங்குடி மக்களுக்குப் பலவிதமான உதவிகளைச் செய்கின்றனர்.
தொடர்புக்கு: சேவா மேலாளர் - 94426 46704
இங்கு கற்றுக் கொள்ள வருபவர்களின் வசதிக்காகத் தங்கும் ஏற்பாடு செய்துள்ளனர். முன்கூட்டியே தெரிவித்து முன்பதிவு செய்து கொள்ளவும்.
தொடர்புக்கு: (0422) 2657001, 94426 46701 (வரவேற்பு).
ஸ்ரீ சாயிராம் - மேலாளர் - 94426 46702
ஆஸ்ரமத்திலுள்ள கோவிலில் கணேசர், தட்சிணாமூர்த்தி, நர்மதேஸ்வரா, ஞானேஸ்வரி ஆகிய தெய்வங்களை எழுந்தருளச் செய்துள்ளனர். சிறிய குன்று போன்ற அமைப்பில் தனியாக ஸ்ரீ கல்யாண சுப்ரமண்யர் எழுந்தருளியுள்ளார்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.