அருள்மிகு அய்யாசாமி திருக்கோவில் (அய்யாசாமிமலை)
God Name : அய்யாசாமி
திருக்கழுக்குன்றம் கோவில்
வேலூர்
Call : +91-
300 அடி உயரம் கொண்ட மலை. மலை உச்சிக்கு ஏறிச் செல்ல, சிறு சிறு படிகளாகப் பாறையில் செதுக்கி வழி செய்துள்ளனர்.
பெரிய பாறை ஒன்றின் கீழ், குகை போன்ற அமைப்பில் அய்யாசாமி எழுந்தருளியுள்ளார். சுயம்பு லிங்க வடிவம். வடக்கு நோக்கி தரிசனம் தருகின்றார். பூஜையின்போது வெள்ளி ஆபரணங்களால் அலங்கரித்து வழிபடுகின்றனர். அப்போது பூசாரி தனது வாயினை துணியினால் கட்டிக் கொள்வார். வாய்கட்டி பூஜை இங்கு முக்கியமானது.
பூஜையின்போது, அங்கு கூடியுள்ளவர்களுள் எவர் மூலமாவது தன்னை வெளிப்படுத்திக் கொண்டு, நாட்டு வளப்பம் சொல்வார் அய்யாசாமி. இது தொடக்க நாட்களிலிருந்தே நிலவி வருகிறது.
கார்த்திகை ஜோதியின்போது, அய்யாசாமி இருக்கும் குகைக்குச் சென்று, மேலாக உள்ள பாறையில் காதை வைத்துக் கேட்டால், கடலலை ஓசை, ஜலதரங்கம், மற்றும் மணி ஓசை ஆகியவற்றுடன் இறைவன் நடனமாடும் ஒலியை உணர முடியும்.
வடக்கேயுள்ள பெருமாள்காடு எனும் குன்றில் பெருமாள்சாமி எழுந்தருளியுள்ளார்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.