அருள்மிகு ஸ்ரீநிவாசர் திருக்கோவில் (திண்டுக்கல்)
God Name : ஸ்ரீநிவாசப் பெருமாள்
திருக்கழுக்குன்றம் கோவில்
திருவாரூர்
Call : +91-
இத்தலத்திலுள்ள நந்தவனத்தில் தவம் செய்து கொண்டிருந்த ரிஷிகளை இம்சித்து வந்த திண்டாசுரனை வதைத்து, உக்ரம் தணியாமல் இருந்த விஷ்ணுமூர்த்தியை, தாயார் மஹாலட்சுமி சாந்தப்படுத்தினார் என்றும், பின்னர் ரிஷிகளுக்கு கல்யாணக் கோலத்தில் சேவை சாதித்தார் எனவும் ஸ்தல வரலாறு.
மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீநிவாசப் பெருமாள் கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். அலர்மேல் மங்காத் தாயார் உடன் எழுந்தருளி அருள்பாலிக்கின்றார். பெருமாளை பார்த்தபடி எழுந்தருளியிருக்கும் விஸ்வரூப கருடாழ்வார் விசேஷ மூர்த்தியாக போற்றப்படுகிறார். 25 அடி உயரம் கொண்ட பிரம்மாண்டமான அழகிய திருமேனி. வரத முத்திரைகளுடன் ஆஞ்சநேயர், நவநீத கிருஷ்ணர், தாமோதர கணபதி, நவகிரகங்கள், அபய ஆஞ்சநேயர் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம். சக்கரத்தாழ்வாரின் பின்புறமுள்ள நரசிம்மர் தனது நான்கு கரங்களிலும் சக்கரம் ஏந்தியுள்ளார். சுற்றிலும் தசாவதார சிற்பங்கள்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.