அருள்மிகு திருவேங்கடமுடையான் திருக்கோவில் (திருவண்ணாமலை)

God Name : திருவேங்கடமுடையான் எனப்படும் ஸ்ரீநிவாசர்

திருக்கழுக்குன்றம் கோவில்

கோவை

Call : +91-

ஆண்டாள்-ரங்கமன்னார் திருக்கல்யாணம் காண வந்தவர், இங்கேயே தங்கிவிட்டதாக ஐதீகம்.
குன்றின் மீது அமைந்துள்ள கோவில். கிழக்கே கோபாலஸ்வாமி கோவிலும், வனப்பேச்சி அம்மன் கோவிலும், மேற்கே கோனேரி தீர்த்தமும் அமையப் பெற்றுள்ளன. குன்றின் அடிவாரத்தில் உள்ள கோனேரி தீர்த்தக் கரை அருகே அரசமரத்தடியில் விநாயகப் பெருமான் எழுந்தருளியுள்ளார். இவரிடம் ஆசி பெற்று குன்றின் மீது ஏறத் தொடங்குகின்றனர். 12 அடி உயரமும் 8 அடி அகலமும் கொண்ட மிகப் பெரிய திருமேனி. பெரிய ஆதி விநாயகர் என்று திருநாமம். தமிழகத்தின் மிகப் பெரிய பிள்ளையார் எனக் கூறுவர். 200 படிகள் ஏறினால் மங்கம்மா என்கிற பத்மாவதித் தாயாரையும் வேணுகோபால ஸ்வாமியையும் சேவிக்கலாம். மேலும் 50 படிகள் ஏறினால் திருவேங்கடமுடையான் கோவிலைச் சென்றடையலாம். பெருமாள் பாதம் பதிந்த தடயங்கள் உள்ளன. அதனை சேவித்துவிட்டு மூலஸ்தானம் போகலாம். மூலஸ்தானத்தில் மூலவராக திருவேங்கடமுடையான் எனப்படும் ஸ்ரீநிவாசர் கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளி சேவை சாதிக்கிறார். பத்து அடி உயரம் கொண்ட நெடிதுயர்ந்த திருமேனி. அழகிய திருமேனியுடனும் சர்வ அலங்காரங்களுடனும் திருப்பதியில் இருப்பது போலவே தரிசனம் தருகிறார்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.