அருள்மிகு சாத்தூரப்பன் திருக்கோவில், சாத்தூர்

God Name : மூலவராக சாத்தூரப்பன், உற்சவராக வெங்கடாஜலபதி

திருக்கழுக்குன்றம் கோவில்

கோவை

Call : +91-

கண் பார்வையற்ற ஜமீன்தார் ஒருவரின் கனவில் தோன்றிய பெருமாள், தான் நெடுஞ்சாலையிலுள்ள அரசமரக் கிளையில் இருப்பதாகத் தெரிவித்தார். ஊர் மக்களின் துணையோடு சென்று பார்த்த ஜமீன்தார், அரசமரமருகே சென்றதும் ஒரு கண் பார்வை கிடைக்கப் பெற்று, மரக்கிளையில் தொங்கிக் கொண்டிருந்த பூக்குடலையைப் பார்த்தார். பூக்குடலையை இறக்கியதும் இரண்டாவது கண்ணின் பார்வையையும் பெற்றார். பூக்குடலைக்குள் இருந்த விக்ரகங்களை எடுத்து பிரதிஷ்டை செய்து வழிபடலானார். சாஸ்தா இடம் தந்ததால் இவ்வூர் சாத்தூர் என்றாயிற்று. சாஸ்தா கோவில் பூசாரியின் அருள்வாக்கு கூறிய இடத்தில் இவ்வாலயத்தை ஸ்தாபித்தார்கள். பெருமாளுக்கு சாத்தூரப்பன் என்ற திருநாமத்தைச் சூட்டினார்கள். வடக்கிலிருந்து பெருமாள் தெற்கே வந்தமையால் தென் திருப்பதி என அழைக்கின்றனர்.
மூலவர்: சாத்தூரப்பன், தாயார்: அலர்மேல் மங்கை. மூலஸ்தானத்தில் மூலவராக சாத்தூரப்பன் கிழக்கே திருமுகமண்டலம் கொண்டு நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். ஸ்ரீதேவி, பூதேவி தேவியர்கள் மற்றும் வெங்கடாஜலபதி ஆகியோரின் உற்சவ மூர்த்தங்கள் அழகாக இருக்கின்றன. தாயார் அலர்மேல் மங்கை தனி சந்நிதி கொண்டுள்ளார். ஆண்டாள் மற்றும் ஆழ்வார்கள் சந்நிதி கொண்டுள்ளனர். மூலவரை வணங்கிய நிலையில் ஆஞ்சநேயர் காட்சி தருகின்றார். பரமபத வாசல் இருக்கின்றது.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.