அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவில் (பசுவந்தனை)
God Name : ஸ்ரீ கைலாசநாதர்
திருக்கழுக்குன்றம் கோவில்
கிருஷ்ணகிரி
Call : +91-
மூலவர்: ஸ்ரீ கைலாசநாதர், அம்பாள்: ஸ்ரீ ஆனந்தவல்லி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியிருப்பவர் ஸ்ரீ கைலாசநாதர். அழகான தேஜோமய லிங்கம்.
அம்பாள் ஆனந்தவல்லி மிகுந்த வரப்பிரசாதி.
காட்டில் இருந்த சுயம்பு லிங்கம் ஒன்றின் மீது, ஒரு பசு தினந்தோறும் தனது மடியிலிருக்கும் பால் அனைத்தையும் சொரிந்து அபிஷேகம் செய்து வந்தது. பசு தனது மடியால் அணைத்த அடையாளம் மூலவரின் திருமுடி மீது காணப்படுகிறது.
அம்பாள் ஆனந்தவல்லியே பசு வடிவில் வந்து சுவாமியின் மீது பாலை சொரிந்து வந்தனை செய்ததால் இவ்வூர் பசுவந்தனை என்று அழைக்கப்படுகிறது.
தமிழ் புத்தாண்டன்று இவ்வூரின் சுற்றுவட்டார மக்கள் அனைவரும் இவ்விறைவன் முன்பாக பஞ்சாங்கத்தை வைத்து பூஜித்து, புத்தாண்டு சிறப்பாக அமைய அருள் செய்யுமாறு பிரார்த்திக்கின்றனர்.
இக்கோவிலின் முன்பாக சங்குசாமி சித்தரின் ஜீவசமாதி உள்ளது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.