அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் (திருநெல்வேலி)

God Name : சுந்தரேஸ்வரர்

திருக்கழுக்குன்றம் கோவில்

திருவண்ணாமலை

Call : +91-

'சிந்து' என்றால் எலும்பு எனப் பொருள். இத்தலத்து படித்துறையில் வைக்கப்பட்ட எலும்பே பூவாக மாறியது. தேன் திவலைகளை சிந்தும் பூக்களையுடைய துறை என்பதால் சிந்துபூந்துறை எனப்படுகிறது. சிந்துபூந்துறையிலிருந்து நெல்லையப்பருக்கு அபிஷேக நீர் எடுத்துச் செல்வார்கள். மேற்குக் கரையில் நெல்லையப்பரும் காந்திமதி அம்மனும் எழுந்தருளி தீர்த்தம் கொடுக்கும் தைப்பூச மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தையொட்டி கைலாசநாதர் கோவில் உள்ளது. இந்த சிவாலயத்தில் கைலாசநாதரும் சௌந்தரவல்லியும் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர்.
மூலவர்: சுந்தரேஸ்வரர், அம்பாள்: மீனாட்சி மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் சுந்தரேஸ்வரர். பெயருக்கேற்ற அழகிய திருமேனி. அன்னை மீனாட்சி உடன் எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். அப்பர் பெருமானின் பாடலில் வைப்புத் தலமாக இடம் பெற்றிருப்பினும், ஞானசம்பந்தரும் பதிகம் பாடியுள்ளதாகக் கூறப்படுகிறது. தேவார வைப்புத்தலம். குறுக்குத்துறைக்கும் - சிந்துபூந்துறைக்கும் இடையே உள்ளது வீரராகவபுரம். இங்குள்ள பெருமாள் கோவிலில் மூலவராக வீரராகவரும், உற்சவராக வரதராஜப் பெருமாளும் எழுந்தருளி சேவை சாதிக்கின்றனர். (தொலைபேசி : 0462 - 2335340)
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.