கந்தமாதன பர்வதம் - ஸ்ரீ ராமர் பாத கோவில் (ராமேஸ்வரம்)
God Name : ஸ்ரீ ராமரின் பாதங்கள்
திருக்கழுக்குன்றம் கோவில்
Call : +91-
குன்றின் மேல் இரண்டு அடுக்கு மண்டபமாக ஒரு கோவில் இருக்கின்றது. ஸ்ரீ ராமபிரானின் பாதங்கள் பதிக்கப்பட்டு பூஜிக்கப்படுகின்றன. கந்தம் என்றால் சந்தனம், பர்வதம் என்றால் மலை. சந்தன நிறத்தில் காணப்படும் குன்று என்பதால் கந்தமாதன பர்வதம் என்று அழைக்கின்றனர். இந்த மலையின் மேலிருந்துதான் ஹனுமன் இலங்கைக்கு தாவினார் என புராணக் குறிப்பொன்று தெரிவிக்கின்றது. இந்த மலை மீது ஏறி நின்று பார்த்த ராமருக்கு, ராவணனின் அரண்மனை முன்புற வாசல் தென்பட்டதாம். போர் தொடுக்கும் முடிவை இங்கிருந்துதான் எடுத்தார் எனக் கூறப்படுகிறது. (முதலில் கோடியக்கரை எனும் ஊரில் ஒரு உயரமான மணல் மேட்டின் மீது நின்று பார்த்தாராம் ஸ்ரீ ராமர் - ராவணனின் அரண்மனை பின்பற வாசல் தென்பட்டதாம். பின்புற வாசல் வழியே செல்வது வீரனுக்கு அழகல்ல என ராமேஸ்வரம் வந்து கந்தமாதன பர்வதத்தை தேர்ந்தெடுத்தாராம்) இந்த மலை மீது ஏறி நின்று பார்த்தால் இத்தீவின் முக்கிய இடங்கள், சூரிய உதய - அஸ்தமனம் ஆகியன காணலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.