அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவில் (நெடுங்குடி)
God Name : கைலாசநாதர் மற்றும் காசிநாதர் (இரண்டு மூலவர்கள்)
திருக்கழுக்குன்றம் கோவில்
சிவகங்கை
Call : +91-
மூலவர்கள்: கைலாசநாதர், காசிநாதர் (இரண்டு)் அம்பாள்: பிரசன்ன நாயகி.
400 அடி உயரம் கொண்ட மண்மலை மீது கட்டப்பட்டுள்ள ஆலயம். 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஒரு பாண்டிய மன்னனால் கட்டப்பட்ட ஆலயம்.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினர்களாக இரண்டு மூலவர்கள், கைலாசநாதர் மற்றும் காசிநாதர், எழுந்தருளி உள்ளனர். அம்பாள் பிரசன்ன நாயகி உடன் எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். மதுரை வெள்ளியம்பலத்தைப் போன்று அஷ்டகஜங்கள் தாங்கி நிற்கும் சந்நிதி. இதன் எதிரேயுள்ள பத்மபீடத்தில் அமர்ந்து பக்தர்கள் தியானம் செய்கின்றனர்.
உற்சவ மூர்த்தமான சிவனாரின் செப்புத் திருமேனியில், வலது கால் விரல்களில் மூன்று மேல் நோக்கியும் இரண்டு கீழ் நோக்கியும், கருடன் மேலே பறப்பது போல் தோன்றும்படியாக அமைந்துள்ளன.
பெருஞ்சீவி, சிரஞ்சீவி எனும் இரண்டு அசுர சகோதரர்கள் ஆதியில் பிரதிஷ்டை செய்திருந்த 2 சிவலிங்கங்களைக் கண்டெடுத்த பாண்டியன், அவற்றை பிரதிஷ்டை செய்து கோவில் எழுப்பியதாக ஒரு குறிப்பு கூறுகிறது. அமாவாசை, பௌர்ணமி தினங்களில் பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.