அருள்மிகு ஸ்ரீ நந்தீஸ்வரர் திருக்கோவில் (கூடுவாஞ்சேரி)
God Name : ஸ்ரீ நந்தீஸ்வரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
காஞ்சிபுரம்
Call : +91-
1000 ஆண்டுகள் பழமையான கோவில். அமிர்தத்தைப் பகிர்ந்து கொண்ட ஆனந்தத்தில் தேவர்கள் எனப் பெயர்கொண்டார். இவ்ஊரும் நந்திவரம் எனப் பெயர் கொண்டது. நந்திவர்மன் காலத்துக் கோவில் என்பதாலும் இப்பெயர் வந்திருக்கலாம் எனக் கூறுவர். சித்தர்கள் வழிபட்ட ஸ்தலம். இன்றும் சித்தர்கள் வந்து போய்க் கொண்டிருப்பதாகக் கூறுகின்றனர்.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளி அருள் புரிகின்றார் ஸ்ரீ நந்தீஸ்வரர். சுயம்பு லிங்கம். சுவாமிக்கு மிகப் பெரிய திருமேனி. கிழக்கு பார்த்த சந்நிதி. தெற்கு பார்த்த சந்நிதியில் அம்பாள் ஸ்ரீ சௌந்தர நாயகி எழுந்தருளியுள்ளார். அழகொளிர் நாயகி என்றும் கூறுவர். பிரகார வலத்தில் வலம்புரி வல்லப கணபதி, வள்ளி - தேவசேனா உடனாய சுப்ரமண்யர், பிரதோஷ நந்தி, ஷண்முகர், நடராஜர், சூரியன், பைரவர், வீரபத்ரர் ஆகிய மூர்த்தங்களைத் தரிசிக்கலாம். ஸ்தல விருட்சத்தின் கீழ் நந்தி தேவரும் மஹா விஷ்ணுவும் காணப்படுகின்றனர். பைரவருக்கு முந்திரி மாலை போட்டு பிரார்த்தனை செய்கின்றனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.