அருள்மிகு ஸ்ரீ ராஜகணபதி திருக்கோவில் (சேலம்)
God Name : ஸ்ரீ ராஜகணபதி
திருக்கழுக்குன்றம் கோவில்
திருவண்ணாமலை
Call : +91-
மூலஸ்தானத்தில் முழுமுதற் கடவுளான ஸ்ரீ ராஜகணபதி பெரிய திருமேனியுடன் மூலவராக எழுந்தருளியுள்ளார். சேலம் நகர மக்களின் கண்கண்ட தெய்வமாக இருந்து கொண்டு ஆசி வழங்குகிறார். சேர - சோழ - பாண்டிய மன்னர்களால் இந்நகரும் ஆலயமும் அமைக்கப்பட்டு வழிபடப்பட்டதால் மும்முடித் தலைவாயில் என அழைக்கப்படலாயிற்று. மலைகள் சூழ்ந்து காணப்பட்ட பிரதேசம் என்பதால் சைலம் என்றழைக்கப்பட்டு பின்னர் மருவி சேலம் என்றானதாக கூறப்படுகிறது. சேர நாட்டின் கிழக்கு எல்லையாக இருந்ததால் சேரலம் எனப் பெயர்கொண்டு பின்னர் மருவி சேலம் என்றானதாகவும் கூறுவர். வளர்பிறை - தேய்பிறை சதுர்த்தி தினங்களில் கணபதி ஹோமமும், நித்ய அபிஷேக ஆராதனைகளும் சிறப்புற நடைபெறுகின்றன. ஆவணியில் சதுர்த்தி விழா 10 நாட்கள். 10ஆம் நாள் புஷ்ப பல்லக்கு ஊர்வலம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.