அருள்மிகு லட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோவில் (பரமத்தி வேலூர்)

God Name : மூலவர்: லட்சுமி நாராயணர்் உற்சவர்: சாரங்கபாணி

திருக்கழுக்குன்றம் கோவில்

ராணிப்பேட்டை

Call : +91-

மூலஸ்தானத்தில் மூலவரான ஸ்ரீ லட்சுமி நாராயணப் பெருமாள் வீற்றிருந்த திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். தமது இடது மடியில் மஹாலட்சுமித் தாயாரை இருத்தி கம்பீரமாகக் காட்சி தருகின்றார். உற்சவப் பெருமாளான சாரங்கபாணி நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். ஸ்ரீ தேவி - பூதேவி தேவியர்கள் உடன் உள்ளனர். உற்சவத் தாயாராக கோமளவல்லி சேவை சாதிக்கின்றார். நவநீத கிருஷ்ணரின் விக்ரஹம் பேரெழிலுடன் காணப்படுகிறது. கருவறையின் எதிரே பெரிய திருவடி எழுந்தருளியுள்ளார். வலச்சுற்றில் சிறிய திருவடியும், சக்கரத்தாழ்வாரும் சந்நிதி கொண்டுள்ளனர். மஹா மண்டபத்தில் ஆழ்வாராதிகளின் அழகிய ஓவியங்களைக் காணலாம். காவிரிக்கரை அருகே அமைந்துள்ள கோவில். பாஞ்சராத்ர ஆகமத்தைக் கடைப்பிடிக்கும் தென்கலை சம்ப்ரதாயக் கோவில். பரமத்தி வேலூர் அருகேயுள்ள பேட்டை எனுமிடத்தில் பஞ்சமுக ஹேரம்ப கணபதி கோவில் உள்ளது. (04268) 223880 பரமத்திவேலூரின் கிழக்கே 3 கி.மீ தொலைவில் உள்ள நன்செய் இடையாறு எனும் கிராமத்தில் திருவேலிநாதர் கோவில் கொண்டுள்ளார். 35 அடி உயரம் கொண்ட விஸ்வரூப ஷண்முகக் கடவுள் திருவுருவத்தையும் இவ் வூரில் தரிசிக்கலாம்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.