அருள்மிகு தசாவதாரக் கோயில் (ஸ்ரீரங்கம்)
God Name : தசாவதார மூர்த்திகள்
திருக்கழுக்குன்றம் கோவில்
தூத்துக்குடி
Call : +91-
இது 1000 ஆண்டுகள் பழமையான கோயில். திருமங்கை ஆழ்வாரால் கட்டத் தொடங்கப்பட்ட இக்கோயில், அஹோபில மடத்து ஸ்ரீ பரமஹம்ஸேதி ஆதி சடகோப யதீந்த்ர மஹா தேசிகரால் கட்டி முடிக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. திருமங்கை ஆழ்வார் தங்கியிருந்த வீடு, வடக்கு சித்திரை வீதி எண் 26-ல் உள்ளது. பக்தர்கள் அங்கு சென்று தரிசிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.
தசாவதார மூர்த்திகள் கிழக்கே திருமுகம் கொண்டு நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றனர். உற்சவராக லட்சுமி நாராயணர் சேவை சாதிக்கின்றார். தசாவதார மூர்த்திகள் நவக்கிரகங்களின் அதிதேவதைகளாகக் கருதப்படுகின்றனர். மத்ஸ்ய அவதாரம் (கேது), கூர்ம அவதாரம் (சனி), வராஹ அவதாரம் (ராகு), நரசிம்ம அவதாரம் (செவ்வாய்), வாமன அவதாரம் (குரு), பரசுராம அவதாரம் (சுக்ரன்), ராம அவதாரம் (சூரியன்), பலராம - கிருஷ்ண அவதாரங்கள் (சந்திரன்), கல்கி அவதாரம் (புதன்) ஆகிய திருவுருவங்களை சேவிக்கலாம். நரசிம்மமூர்த்தியின் உற்சவ மூர்த்தியையும் சேவிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.