அருள்மிகு அமரபணீஸ்வரர் திருக்கோவில் (பாரியூர்)

God Name : அமரபணீஸ்வரர்

ஈஸ்வரன் கோவில்

நாகப்பட்டினம்

Call : +91-

மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் அமரபணீஸ்வரர். சுயம்பு மூர்த்தி தேஜோமயமாக ஒளி வீசும் அழகிய லிங்கம். அம்பாள் சௌந்தரநாயகி பெயருக்கேற்ப சௌந்தர்யமான தோற்றத்துடன் எழுந்தருளி அருள் புரிகின்றாள். பளிங்கு கற்களால் உருவான கருவறை. நடுவே சண்முக சுப்ரமண்யர், அனுக்கை விநாயகர், பைரவர் அறுபத்திமூவர் ஆகிய மூர்த்திகளை தரிசிக்கலாம். பிரகார வலச்சுற்றில் மீனாட்சி சமேத சுந்தரேஸ்வரர், சனீஸ்வரர், சண்டேஸ்வரர், நடராஜர் ஆகிய மூர்த்திகள் சந்நிதி கொண்டுள்ளனர், சித்திரையில் ப்ரம்மோத்சவம், வைகாசி விசாகம், ஆனி திருமஞ்சனம், ஆடி பூ ரம், ஆருத்ரா தரிசனம் சிவராத்திரி, பங்குனி உத்திரம் ஆகிய விழாக்களை கொண்டாடுகின்றனர். இவ்வூரிலுள்ள பெருமாள் கோவிலில் ஸ்ரீ தேவி - பூதேவி சமேத ஆதி நாராயணப் பெருமாளையும், சஞ்சீவி ஆஞ்சநேயரையும் சேவிக்கலாம்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.