அருள்மிகு சாரதாம்பாள் திருக் கோவில் (திருச்சிராப்பள்ளி)

God Name : குறிப்பிடப்படவில்லை

திருக்கழுக்குன்றம் கோவில்

தூத்துக்குடி

Call : +91-

மூலஸ்தானத்தில் அன்னை சாரதாம்பாள் மூலவராக எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். சின்முத்திரை, அட்சய மாலை, வேத புஸ்தகம், அமிர்த கலசம் கொண்ட சதுர் புஜங்களுடனும், ஒரு கிளியுடனும் காட்சி தருகின்றாள். அன்னையின் எதிர்புறம் சிவநந்திராஜர் - சிவபெருமானை நெற்றியில் தாங்கிய வண்ணம் கிழக்கு பார்த்து எழுந்தருளி தரிசனம் தருகின்றார். பிரதோஷ வழிபாடு சிறந்தது. பால கணபதி, பால முருகன், நர்த்தன கணபதி, நவக்ரஹங்கள் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம். கிழக்கு பார்த்து நின்ற திருக்கோலத்தில் மஹாலட்சுமி, குருவாயூர் கிருஷ்ணன், தட்சிணாமூர்த்தி, ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் ஆகிய அழகிய திருவுருவங்களை தரிசிக்கலாம். ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அம்மன் எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். ஸ்ரீ சக்கர பூர்ண மஹா மேரு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. மஹாளய அமாவாசையன்று மூலவர் சாரதாம்பாளுக்கு அபிஷேகம் செய்வர். ஆங்கில வருடப் பிறப்பன்று லட்டுப் பாவாடை அலங்காரம், தீபாவளி - அமாவாசையன்று கேதார - கௌரி விரத பூஜைகள் ஆகியன சிறப்புற நடக்கின்றன. நவராத்ரி விழா, விஜயதசமி அம்மன் உலா, சித்ரா பௌர்ணமி விழா அனைத்தும் கொண்டாடுகின்றனர்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.