அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக் கோவில் (திருப்பட்டூர்)

God Name : காசி விஸ்வநாதர்

திருக்கழுக்குன்றம் கோவில்

தூத்துக்குடி

Call : +91-

பிடவூர் நாட்டுத் திங்களூர் என கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பட்டுள்ள திருப்பட்டூர் எனும் இவ்வூரில் ஒரு காலத்தில் பெரும் வறட்சி நிலவியதாம். மழை பொய்த்ததால் நீர் நிலைகளும் இல்லாதிருந்தது. அந்த சமயத்தில் இங்கு கோவில் கொண்டிருந்த காசி விஸ்வநாதருக்கு அபிஷேகம் செய்ய தண்ணீர் இல்லாததால் வருத்தப்பட்டு தவித்துக் கொண்டிருந்தார் வியாக்ரபாத முனிவர். அப்போது தண்ணீருடன் அவ்வழியே சென்ற ஐராவதத்தை (வெள்ளை யானையை) வழிமறித்து, அபிஷேகத்திற்கு கொஞ்சம் தண்ணீர் தருமாறு கேட்டார். திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரரின் அபிஷேகத்திற்காக கொண்டு செல்லும் தண்ணீர், அதை தரமாட்டேன் என்றது ஐராவதம். இதனால் கோபம் கொண்ட வியாக்ரபாதர் ஆக்ரோஷமாக தனது புலிக்கால்களால் பூமியை அறைந்து தோண்டினார். அதிலிருந்து பிரவாகமாக வெளிப்பட்டது நீர். புலியைப் போலப் பாய்ந்து உருவாக்கியதாலும், தோற்றத்தில் அசல் புலிக்கால்கள் போன்ற வடிவத்தில் இருப்பதாலும், இதற்கு புலிப்பாய்ச்சி திருக்குளம் என்று பெயர். இந்தக் குளம் கோவிலுக்கு முன்பாக உள்ளது. வியாக்ரபாதர் உண்டாக்கிய இந்த தீர்த்தத்தில் கங்கையே கலந்திருப்பதாக ஐதீகம். புலிப்பாய்ச்சி திருக்குளத்து நீரைக் கொண்டு காசி விஸ்வநாதருக்கு அபிஷேகம் செய்து கொண்டிருந்தார் வியாக்ரபாதர். திருவானைக்காவல் சென்ற ஐராவதம், வியாக்ரபாதர் வழிமறித்து தண்ணீர் கேட்ட விபரத்தை அங்குள்ள மூலவர் ஜம்புகேஸ்வரருக்கு விவரித்தது. அவரது அறிவுரையின் பேரில் தண்ணீர் எடுத்துக் கொண்டு திருப்பட்டூர் வந்து, வியாக்ரபாதரை அணுகியது. தண்ணீரை வாங்க மறுத்தார் வியாக்ரபாதர். கோவிலுக்கு வெளியே நின்றபடி, தான் கொண்டு வந்த தண்ணீரை தும்பிக்கையால் பீய்ச்சி அடித்து காசி விஸ்வநாதருக்கு அபிஷேகம் செய்தது ஐராவதம். இந்த நிகழ்வை கோவில் கோபுரத்தில் சிற்பமாக வடித்துள்ளனர்.
மூலவர்: காசி விஸ்வநாதர், அம்பாள்: காசி விசாலாட்சி. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் காசி விஸ்வநாதர். பெரிய சிவலிங்கத் திருமேனி. கிழக்கு பார்த்த சந்நிதி. தெற்கு பார்த்த சந்நிதியில் அன்னை காசி விசாலாட்சி எழுந்தருளி அருள் புரிகின்றாள். கோஷ்டத்தில் வலம்புரி விநாயகர் வரப்பிரசாதியாக அமர்ந்து ஆசிர்வதிக்கிறார். வியாக்ரபாதரின் திருவுருவம் இருக்கின்றது. பிரதான வாசல் வழியாக உள்ளே சென்றால் நாம் முதலில் தரிசிப்பது வியாக்ரபாதரின் பிருந்தாவனம் ஆகும். ருத்ராட்ச பந்தலின் கீழ் அவரது ஜீவ சமாதி. பிருந்தாவனத்தின் நாற்புறமும் தசாவதார புடைப்பு சிற்பங்கள் உள்ளன. ஒவ்வொரு பௌர்ணமி தினத்தன்றும் சமாதி முன் அமர்ந்து தியானம் செய்யப்படுகிறது. ஸ்ரீ காசி விஸ்வநாதரும், ஸ்ரீ காசி விசாலாட்சியும் இங்கு தனித்து எழுந்தருளியிருப்பதால் இத்தலத்தை காசிக்கு நிகராக போற்றுகின்றனர். சூரியனும் சந்திரனும் தலா 6 மாதங்கள் கிரணங்களாக விழுந்து வழிபடுவதால் இங்கு நவக்கிரகங்கள் நிறுவப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.