அருள்மிகு துரவு மேல் அழகர் கோவில் (அழகர் கோவில்)
God Name : அழகர், வீரபத்ரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
திருநெல்வேலி
Call : +91-
துரவு என்றால் கிணறு. கிணற்றை மூடி, அதன் மேல் கர்ப்பக்ரஹம் அமைத்து, கருங்கல் திண்டு ஒன்றை அமைத்து, அதன் மேல் திருவாசியை வைத்து வழிபடுகின்றனர். அதன் மேல் அமர்ந்து ஆட்சி செய்யும் அழகர் அரூபமாக இருக்கின்றார். வலப்பக்கம் 30 அடி உயர குதிரை, இடப்பக்கம் 40 அடி உயர குதிரை மற்றும் 50 அடி உயர யானை சிலைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
நந்தியம் பெருமான் சற்று தூரத்தில் காணப்படுகிறார். சுற்றுப் பிரகாரத்தின் இரண்டு பக்கங்களிலும் விநாயகப் பெருமானை தரிசிக்கலாம். உருட்டும் விழிகளுடனும், பெரிய மீசையுடனும் வீரபத்ரர் எழுந்தருளியுள்ளார். எதிரே சூலாயுதங்கள் நடப்பட்டுள்ளன. பக்தர்கள் தங்கள் குறைகளை சீட்டில் எழுதி, வீரபத்ரரின் கையில் தொங்கும் கம்பியில் குத்தி வைக்கின்றனர்.
முறுக்கிய மீசையுடன் மதுரை வீரன், அஷ்டபுஜ செல்வ மாகாளி, விராலி மரத்தடியில் பதினெட்டாம்படி கருப்பர் ஆகிய திருவுருவங்களை தரிசிக்கலாம். வழக்குகளில் ஜெயம் பெறவும், களவு போன பொருள் திரும்ப கிடைக்கவும் பிரார்த்திக்கின்றனர். 60 அடி தூரத்திலுள்ள மண்டபத்திலிருந்துதான் பெண்கள் தரிசிக்க வேண்டும்.
தவம் செய்து கொண்டிருக்கையில் அழகர் மாயமாய் மறைந்தாராம். அதனால் அவருக்கு உருவ வழிபாடு கிடையாது. அரூபமாகத்தான் இருக்கின்றார்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.