அருள்மிகு காஞ்சி காமகோடி ஸ்ரீ காமாட்சியம்மன் திருக்கோவில் (காஞ்சி)

God Name : ஸ்ரீ காமாட்சி அம்மன்

காமாட்சி அம்மன் கோவில்

திருவாரூர்

Call : +91-

ஸ்தல வரலாறு ஆதியில், இக்கோவில் இருந்த பகுதியை சுற்றிலும் ஷெண்பகக் காடாக இருந்தது. இந்தக் காட்டில் தவம் செய்துகொண்டிருந்த தேவர்களையும், ரிஷிகளையும் அச்சுறுத்தி இம்சித்து வந்த பந்தகாசுரன் மிகுந்த பலசாலியாக விளங்கினான். ஐந்து வயது சிறுமியால் மட்டுமே தனது உயிர் பிரிய வேண்டும் என்ற வரத்தைப் பெற்றவன். தேவர்களும் முனிவர்களும் இந்த அசுரனுக்குப் பயந்து காட்டில் மறைந்து வாழ்ந்து வந்தனர். ஒரு நாள், இவ்வனத்தின் நடுவே ஒரு மண்டபத்தில் அன்னை பராசக்தி அமர்ந்திருந்தாள். தேவர்கள் அருகே சென்றதும் அன்னை மறைந்து விட்டாள். உருவம் - அருவம் ஆனபோதிலும், கண்ணில் தோன்றி மறைந்த அந்த திருவுருவத்தை மனதில் நிறுத்தி வழிபட்டனர். தேவர்கள் கிளிகளின் வடிவம் கொண்டு வழிபட்டதாக கூறுவர். உரிய சமயத்தில், ஐந்து வயது நிரம்பிய பாலகியின் வடிவத்தில் தோன்றிய அன்னை, பந்தாகாசுரனை சம்ஹாரம் செய்து, தேவர்களையும் ரிஷிகளையும் காப்பாற்றினாள். அன்னையின் உத்தரவுப்படி, அசுரனின் பிரேதத்தை, இவ்வனத்தில் புதைத்து, ஜயஸ்தம்பத்தை அதன் மீது நாட்டினார்கள். காயத்ரி மந்திரங்களை 24 தூண்களாக அமைத்து, அதன் மீது மண்டபம் எழுப்பினார்கள். மண்டபத்துக்குள் விக்ரஹ பிரதிஷ்டை செய்து, தியானத்தில் பார்த்த தேவர்களும் முனிவர்களும் ஓர் அதிசயத்தைக் கண்டனர். விக்ரஹம் இருந்த இடத்தில், இப்போது நாம் தரிசிக்கும் அன்னையின் திவ்ய ஸ்வரூபம் இருந்தது. ஆதி சக்தியான ராஜ ராஜேஸ்வரி, தானே பாலகி வடிவில் வந்து பந்தகாசுரனை வதைத்ததையும், பிரதிஷ்டை செய்யப்பட்ட விக்ரஹத்தில் எழுந்தருளியிருப்பதையும், அனைவருக்கும் உணர்த்தினாள். கா என்கிற கலைமகளையும், மா என்கிற திருமகளையும், க்ஷ என்கிற மலைமகளையும்,
ஆதி சக்தி பீடம் - ஸ்ரீ காமகோடி பீடம் - ஸ்ரீ சக்கர பீடம் - சப்த மோட்ச ஸ்தலங்களுள் ஒன்று மூலஸ்தானத்தில் மூலவராக அன்னை காமாட்சி அமர்ந்து அருள் பாலிக்கின்றாள். சாந்தமே உருவாக சகலாபரண புஷிதையாக காயத்ரி மண்டபத்தினுள், பத்மாசனத்தில் அமர்ந்து கோலத்தில் காட்சி தருகின்றாள். சதுர புஜங்களில் பாசம், அங்குசம், ஐவகை புஷ்ப பாணங்கள், கரும்பு வில் ஆகியன கொண்டு தென்திசை நோக்கி, பரபிரம்ம ஸ்வரூபிணியாக தரிசனம் தருகின்றாள். ஸ்ரீ சக்கரத்தில் பிந்து மண்டல வாசினியாக முக்கோணத்தில் உறைபவள் என்பதால் மூலஸ்தானமும் முக்கோண வடிவில் அமைந்துள்ளது. மூன்றரை சுற்றுப் பிரகாரமே இருப்பதால் பிரதக்ஷிணம் செய்ய இயலாது. ஸ்ரீ காமாட்சியின் எதிரில் உள்ள ஸ்ரீ சக்கரத்திற்கே அர்ச்சனை மற்றும் பூஜை வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. வழக்கமாக பீடத்தின் கீழ் ஸ்ரீ சக்கரம் அமைப்பார்கள். உக்ர ஸ்வரூபிணியாக இருந்த அன்னையின் உக்ரத்தை தணிப்பதற்காக, ஸ்ரீ ஆதி சங்கரர் தேவியின் முன்புறமாக ஸ்ரீ சக்கரத்தை அமைத்து, சாந்த ஸ்வரூபிணியாக மாற்றினார் என ஐதீகம். ஸ்ரீ சக்கரத்தில் அஷ்ட லக்ஷ்மிகள் இருக்கின்றனர். மூலவருடன் சேர்ந்து தபஸ் காமாட்சி, பிலகாஸ காமாட்சி, உத்ஸவ காமாட்சி, மற்றும் பங்காரு காமாட்சி எனப்படும் காமாட்சியின் பாதங்கள் என பஞ்ச காமாட்சிகள்
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.