அருள்மிகு வரதராஜப் பெருமாள் திருக் கோவில் (கஞ்சனூர்)
God Name : ஸ்ரீ வரதராஜப் பெருமாள், ஸ்ரீ கற்பகாம்பாள் சமேத அக்னீஸ்வரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
அரியலூர்
Call : +91-
மூலஸ்தானத்தில் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் மூலவராக வீற்றிருந்து சேவை சாதிக்கின்றார். சங்கு - சக்கரம், அபய - வரத கரங்கள் கொண்ட சதுர்புஜதாரி. ஸ்ரீ தேவி - பூதேவி தாயார்கள் உடன் உள்ளனர். சுதை என்பதால் திருமஞ்சனம் செய்வதில்லை.
உற்சவ மூர்த்தங்களாக ஸ்ரீ ராமர், சீதா பிராட்டி, லக்ஷ்மணன், ஹனுமன், சக்கரத்தாழ்வார் ஆகிய மூர்த்தங்கள் சேவை சாதிக்கின்றனர். மஹா மண்டபத்தில் ஸ்ரீ கோதண்ட ராமர் எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். இவரே பிரதான தெய்வமாக முன்பு இங்கிருந்தவர். பின்னர் வந்து அமர்ந்தவரே ஸ்ரீ வரதராஜர்.
ஸ்ரீ கற்பகாம்பாள் சமேத அக்னீஸ்வரர் இவ்வாலயத்துள் இருக்கின்றார். ஹரதத்தர் வேண்டியதால் காட்சி தந்தவர். பெருமாள் கோவில் பட்டாச்சார்யாரே அபிஷேக ஆராதனை செய்கிறார்.
ஹரதத்தர் மீது பொறாமை கொண்ட சிலர் அவரை பழுக்க காய்ச்சிய இரும்பு முக்காலி மீது உட்கார வைத்தனர். அப்போதும் சிவனே பரம்பொருள் எனக் கூறி அமர்ந்தவர். தீப்பிழம்பின் நடுவே முக்காலியில் ஹரதத்தர் உருவம் காணலாம். ஹரதத்தர் தனிக் கோவிலில் வழிபட்ட சிவலிங்கமும், அக்னி பீடமும் தரிசிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.