அருள்மிகு பிரளயம் காத்தப் பெருமாள் திருக்கோவில் (அ) ஏரி காத்த ராமர் கோவில், (மதுராந்தகம்)
God Name : ஸ்ரீ கோதண்டராமர்
திருவாரூர்
Call : +91-
ஸ்தல வரலாறு
ஏரி காத்த ராமர்; கோவில் என்றே பிரபலம். ஆதியில், மகிழ் மரங்கள் மிகுந்து காணப்பட்டதால்
வகுளாரண்யம் எனப் பெயருற்றது. உத்தமச் சோழன் என்னும் மதுராந்தக சோழனால் வேதமோதும்
அந்தணர்கள்; களுக்கு தானமாக வழங்கப்பட்ட ஊர்; என்பதால் சோழனின் பெயரைக் கொண்டே
மதுராந்தகம் என அழைக்கப்படலாயிற்று. மதுராந்தகம் ஏரி உடையாமல் காத்ததனால்
இவர்; ஏரி காத்த ராமர்; எனப் போற்றப்படுகிறார்;. ப்ரம்ம வைவர்த்தம், பார்க்கவம் ஆகிய
புராண நூல்களில் இத்தலத்தின் பெருமைகள் கூறப்பட்டுள்ளது.
சுகப்ரம்மம், விபாண்டகர; ஆகியோர்; தவம் மேற்கொண்ட ஸ்தலம்.
சீதையைத் தேடிக் கொண்டு வந்த ராமனிடம், தன்னுடைய ஆஸ்ரமத்திற்கு வருமாறு அழைத்தார்;
விபாண்டகர;. பிறிதொரு சமயம் வருவதாக வாக்களித்திருந்தார்; ராமர்;.
ராவணனிடமிருந்து சீதையை மீட்டுத் திரும்புகையில், விபாண்டகமகரிஷிக்கு கொடுத்திருந்த
வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், இத்தலத்திற்கு சீதாப்பிராட்டியுடன் வருகை தந்தார்;
என ஸ்தல வரலாறு.
மதுராந்தகத்திலுள்ள பெரிய ஏரி ஒன்று, ஆண்டுதோறும் மழைக் காலத்தில் கரையை உடைத்துக்
கொண்டு, ஊருக்கு சேதம் விளைவிப்பது வழக்கமான ஒன்றாகும். கிழக்கு இந்தியக் கம்பெனியார்;
ஆட்சியில் கலெக்டராக இருந்த லயனஸ் பிளேஸ் என்ற வெள்ளைக்கார துரை 1795ம் வருஷம்
ஏரிக்கரையை பலமாக கட்டி மேம்படுத்தினான்;. ஆனால் மழை வெள்ளம் அதை சேதப்படுத்தி
ஊருக்குள் தண்ணீர்; புகுந்தது. மீண்டும் பணம் செலவழித்துக் கட்டினான்; மறுபடியும் கரை உடைந்தது.
பஜனை கோஷ்டியை சேரந்த பக்தர்; ஒருவர;, ஜனகவல்லித்
த்வயம் விளைந்த க்ஷேத்ரம் என்றும் அபிமான ஸ்தலமாகவும் போற்றப்படுகிறது
மூலஸ்தானத்தில் ஸ்ரீ கோதண்டராமர் கிழக்கே திருமுக மண்டலம் கொண்டும்,
கையில் வில்லுடனும் நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார்.
ஸ்ரீ தேவி - பு தேவி சஹிதம் கருணாகரப் பெருமாள் உத்ஸவராக சேவை சாதிக்கின்றார்.
வலது புறத்தில் ஜனகவல்லித் தாயார் சந்நிதி உள்ளது. தாயார் மிகுந்த வரபிரசாதி என்பர்.
உத்ஸவ மூர்த்திகளுள் ஸ்ரீ ராமர் விக்ரஹம் அஸ்திர பிரயோக பாவத் திருமேனியாக இல்லாமல்
அனுக்ரஹ முர்த்தியாக இருப்பது விசேம். சீதா தேவி மற்றும் லட்சுமணன் விக்ரஹங்கள்
அழகாக இருக்கின்றன.
திருவாபரண அலங்காரம், வைரமுடி சேவை, முத்துக் கொண்டை போன்று ஐந்து வித
அலங்காரங்கள்கொண்ட ராமரை இத்தலத்தில் சேவிக்கலாம். ஸ்ரீ ராமாநுஜர் வெள்ளுடை
தரித்து க்ரஹஸ்தராய் காட்சிதருவது இத்தலத்தில்தான் என்பர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.