அருள்மிகு நேத்திரநாதர் திருக்கோவில் (திருப்பள்ளியின் முக்கூடல்)
God Name : திரிநேத்திர நாதர்
திருக்கழுக்குன்றம் கோவில்
கரூர்
Call : +91-
தனது இறுதிக் காலத்தை காசி-கங்கை போன்ற இடங்களில் கழிக்க வேண்டும் என எண்ணிய ஜடாயு, அந்த வரத்தைப் பெற வேண்டி, சிவபெருமானை நோக்கி இத்தலத்தில் தவமிருந்தது. ராவணன் சீதையை கவர்ந்து செல்லும் போது போரிட்டு உயிர் நீப்பாய் - அப்போது இங்கு முக்கூடல் தீர்த்தத்தை உண்டாக்குகிறேன், அதில் மூழ்கி புண்ணியம் பெறுவாயாக என வரமருளினார்.
ஸ்ரீ ராமர் பூஜித்த ஸ்தலம். மேற்கே ராமசாமி கோவில் ஒன்றும் இருக்கின்றது. குருவி ராமேஸ்வரம் என்றும் அரியான்பள்ளி என்றும் கூறுவர்.
இத்தீர்த்தத்தை ஷோடஸ சேது என்பர். இதற்குள் 16 கிணறுகள் உள்ளன. கங்கையை விட 16 மடங்கு சிறப்பு வாய்ந்தது. இங்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் கயா கரையில் செய்த பலன் கிடைக்கும் என்பதால் கேக்கரை என்பர்.
சுத்தமான இடத்தில் ஆற்று மணலை எடுத்து வைத்து, அதனை கரிசலாங்கண்ணி இலைகளால் மூடி வைத்து, தேங்காய் எண்ணெய் மற்றும் கரிசலாங்கண்ணி எண்ணெய் நிரப்பிய ஒன்பது விளக்குகளை ஏற்றி சாட்சியாக வைத்துக் கொண்டு தர்ப்பணம் செய்து மூதாதையர்களை மகிழ்விக்கின்றனர் என குறிப்பொன்று கூறுகிறது.
மூலவர்: திரிநேத்திர நாதர், அம்பாள்: மை மேவுங் கண்ணி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் திரிநேத்திர நாதர். பளபளப்பான திருமேனி. இவருக்கு முக்கோண நாதர் என்ற பெயரும் உண்டு. மாசி சிவராத்திரி அன்று சூரியனின் ஒளிக் கதிர்கள் சுவாமி மீது படர்கின்றன.
அம்பாள் மை மேவுங் கண்ணி எனப்படும் அஞ்சனாட்சியுடன் எழுந்தருளி அருள் புரிகின்றாள்.
ராமர், ஜடாயு, விநாயகர், முருகன் ஆகியோர் சுதை சிற்பங்களாகக் காணப்படுகின்றனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.