வியாக்ரபாதர் எனும் புலிக்கால் முனிவர் பூஜித்து வழிபட்ட இறைவன் என்பதால் வியாக்ரபுரீஸ்வரர் என்ற பெயரைக் கொண்டார். புலியால் வலம் செய்யப்பட்ட ஸ்தலம், எனவே புலிவலம்.
வியாக்ர என்றால் புலி, பாத என்பது காலைக் குறிப்பது, எனவே புலிக்கால் முனிவர் என்று பெயர். இவர் மத்யந்த முனிவரின் புதல்வர். வியாக்ரபாதர் பூஜித்த ஒன்பது சிவஸ்தலங்களும் புலிச்வரங்கள் எனவும், இறைவன் புலீஸ்வரராகவும் வழிபடப்படுகின்றன.
இவ்வாலயத்து அர்ச்சகர் பெரும் சிவ பக்தர். முன்நாளில் இறைவனுக்கு சூட்டப்படும் பூமாலைகளை இவர் வீட்டுக்கு எடுத்துச் சென்று, தனக்கு பிரியமானவளுக்கு சூட்டி மகிழ்வார். ஒரு நாள், காவலரின் மூலம் மன்னர் ஆலயம் வருவதை அறிந்து, அவளிடமிருந்து மாலையை திரும்பப் பெற்று, பூஜை செய்யலானார்.
அரசன் வந்ததும், பூஜையை முடித்து, பூமாலையை இறைவனிடமிருந்து எடுத்து அரசனுக்கு அணிவித்தார். மாலையில் நீளமான முடி இருந்தது கண்டு, கோபமுற்ற அரசன், குற்றம் செய்தவர்கள் நாளைக்கு தண்டிக்கப்படுவார்கள் என கூறிக் சென்றான்.
சிவ அபராதமும் செய்து மன்னனையும் ஏமாற்றியதால் மிகவும் மனக்கவலை கொண்ட அர்ச்சகர் சரணடைந்தார். அர்ச்சகரை காப்பாற்ற, பிரத்யட்சமான அரசனிடம் அந்த முடி தனது சிகையிலிருந்து வந்ததுதான் என்றுக் கூறி, குடுமியுடன் காட்சி தந்தார் என ஸ்தல வரலாறு.
அப்பரடிகளின் க்ஷேத்ரக் கோவையிலும், திருவீழிமலை திருத்தாண்டகத்திலும் இத்தலம் பற்றி குறிப்பிடப் பட்டுள்ளது. பட்டினத்தாரின் பாடலும் அமையப் பெற்ற ஸ்தலம்.
தேவார வைப்புத்தலம், நவ புலீஸ்வரங்களுள் ஒன்று.
வியாக்ரபாதர் பூஜித்த ஒன்பது சிவஸ்தலங்களும் புலிச்வரங்கள் எனவும், இறைவன் புலீஸ்வரராகவும் வழிபடப்படுகின்றன. அவை:
1. திருப்புலிவனம்
2. புலிப்பாக்கம் (செங்கல்பட்டு)
3. புலிப்புரக்கோவில் (மதுராந்தகம்)
4. ஓமாம்புலியூர் (சிதம்பரம் அருகே)
5. புலிவலம் (திருவாரூர்)
6. தப்ளாம்புலியூர் (திருவாரூர்)
7. பெரும்புலியூர் (தஞ்சாவூர்)
8. விளமர் (திருவாரூர்)
9. கோடம்பாக்கம் (சென்னை)