பேரூரில் பிரதிஷ்டை செய்வதற்காக, மிகப் பெரிய விநாயகரின் திருவுருவத்தை ஏற்றிக்கொண்டு மதுரையிலிருந்து வந்த மாட்டு வண்டி, இவ்வூரைக் கடக்கும்போது, வண்டியின் அச்சு முறிந்து, விநாயகரின் சிலை இங்கேயே நிலை கொண்டது.
வண்டியை சரி செய்த பின்னர், இவரை திரும்ப எடுக்க பலவிதமான முயற்சிகள் செய்தனர். முடியாமல் தோல்வியுற்றனர். விநாயகர் இங்கேயே கோவில் கொள்ள திருவுள்ளம் கொண்டார் போலும் என மகிழ்ந்து, இங்கேயே பிரதிஷ்டை செய்து கோவில் எழுப்பியதாக ஸ்தல வரலாறு கூறுகிறது.
பால், தயிர், இளநீர், சந்தனம், பன்னீர், திருநீறு, பஞ்சாமிர்தம் என ஒவ்வொரு அபிஷேகத்திலும் ஒரு எழிற்கோலம் காட்டுகிறார். அஸ்வினி முதல் ரேவதி வரை 27 நட்சத்திர நாட்களிலும் விதவிதமாக அலங்காரம் செய்கின்றனர். இங்குள்ள நந்தவனத்து மலர்கள் விநாயகரை அலங்கரிக்கின்றன.