சிவபெருமானை அல்லாது பிற தெய்வங்களைத் தொழக் கூடாது என வைராக்கியம் கொண்டிருந்த ப்ருங்கி முனிவர், தம்மைப் பொருட்படுத்தவில்லை எனக் கோபமுற்ற அம்பிகை, ப்ருங்கி முனிவரின் குருதி மற்றும் சதை ஆகியன அகலச் செய்தார். இறைவனருளால் அவற்றை மீண்டும் பெற்றார் முனிவர். (இதன் பின்னர்) உமாதேவியும் (இறைவனுடன்) இணைந்து மாதொருபாகன் (அர்த்தநாரீஸ்வரர்) என்றானார்.
அர்த்தநாரீஸ்வரர் ஸ்வரூபம் கொண்டதால், (ப்ருங்கி முனிவர்) வண்டு ரூபம் கொண்டு, (இறைவனின்) திருவுருவத்தைத் துளைத்து வழிபட்டார். அதன் காரணமாக, வண்டின் ஓசை கர்ப்பக்ரஹத்தில் கேட்டுக் கொண்டே இருப்பதாகக் கூறுகின்றனர். வண்டு உறைந்த தலம் என்பதே வண்டுறை ஆகி, இப்போது திருவெண்டுறை என்றானது.