கரிகாலப் பெருவளத்தான் எனும் சோழ மன்னன் வேட்டையாடச் சென்றபோது, வேங்கை ஒன்று துரத்தி வந்ததால், வேங்கைக்குப் பயந்து அருகிலிருந்த குளத்தில் குதித்து மறைந்து கொண்டான். சற்று நேரம் கழித்துப் பார்த்ததில், வேங்கை கருவேல மரத்தடியில் மறைந்து - அந்த இடத்தில் சிவலிங்கம் ஒன்று சுயம்புவாகத் தோன்றக் கண்டான்.
கரிகாலன் புலிக்குப் பயந்து விழுந்த குளத்து நீர், அவனது கருங்குஷ்ட நோயைக் குணமாக்கியது. இதனால் மகிழ்வுற்ற கரிகாலன் இவ்வாலயத்தை ஸ்தாபித்தான் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
இதனால் ஸ்வாமிக்கு கருணாகரஸ்வாமி என்ற பெயர் வந்தது. இக்குளத்தில் நீராடி ஒரு மண்டலம் இவ்விறைவனை வழிபடுவோர்க்கு தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள் நீங்கும் என்பர்.
எண்ணற்ற செப்புத்தகடுகள் கிடைத்த ஸ்தலம்.
வைகாசியில் பிரம்மோத்ஸவம். பல்லக்கும், தேர் பவனியும் அவசியம் காண வேண்டியது என்பார்கள்.
தேவார வைப்புத்தலம்.