்
 ்
 ்
 ்
மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி எழுந்தருளி ஆசி வழங்குகின்றார். பெரிய திருமேனியும் சதுர்புஜங்களும் கொண்டு, இடது தொடையில் வல்லபையை அமர்த்தியவாறு கம்பீரமாக தரிசனம் தருகின்றார். சித்திரை மாத முதல் 12 நாட்களுக்கு சூரிய பகவானின் ஒளிக்கதிர்கள் மூலவர் மீது படர்ந்து சூரிய பூஜை செய்கின்றன. மந்திர மாகரண விதிப்படி யோக தத்துவ விளக்கமாக அமர்ந்த நிலை. விநாயகப் பெருமானின் 32 வடிவங்களில் ஒன்று உச்சிஷ்ட கணபதி தோற்றம். அகஸ்தியரின் சீடரான ஹேரம்ப மகரிஷி நிறுவி வழிபாடு செய்ததாகக் கூறப்படுகிறது. மூஞ்சூறு வாகனம் அழகாக இருக்கின்றது. நெல்லையப்பரும் தரிசனம் தருகின்றார். குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இவரை வழிபட்டு நற்பயன் அடைகின்றனர். நெல்லையப்பர் கோவிலில் வழிபாடு நடக்கும்போது பிரம்மாண்ட மணி ஒலிக்கும். அதைத் தொடர்ந்து இங்கும் மணி ஓசை கேட்கும். இதனால் மூர்த்தீஸ்வரம் என்ற பெயரிலிருந்த இவ்வூர் மணிமூர்த்தீஸ்வரம் என்றானது. பூக்கள் நிரம்பிய ஏழு கலசங்கள் தாமிரபரணியில் மிதந்து வந்து, சிந்துபூந்துறை அருகே வரும்போது, குப்புறக் கவிழ்ந்து பூக்கள் சிதறினவாம். அப்போது இக்கோவில் மணி தானாகவே ஒலிக்க ஆரம்பித்ததாம்.
05.30 AM
07.00 PM
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Reserve your sacred rituals in advance for a blessed experience.