ஸ்தல வரலாறு:
சிவபெருமானை அழைக்காமலும், அவருக்குச் சேரவேண்டிய அவிர்பாகத்தைத் தராமலும், தட்சன் நடத்திய யாகத்திற்கு அக்னி தேவன் சென்று யாகத்தில் கலந்துகொண்டதால், சிவபெருமானின் சாபத்திற்கு உள்ளாகி, உடல் முழுவதும் ரோகம் அடைந்தான்.
செய்த பிழையை மன்னித்தருள வேண்டி, இத்தலத்திற்கு வந்து, தீர்த்தம் ஒன்றை உண்டாக்கி, இறைவனை வழிபட்டு நோய் நீங்கப் பெற்று, அழகிய திருமேனி பெற்றான் என்பது இத்தல வரலாறு.
நோய்வாய்ப்பட்டவர்கள் இத்தலம் வந்து அக்னி தீர்த்தத்தில் நீராடி, திருமேனியாரை வழிபட்டு நற்பலன்கள் பெறுவதாகக் கூறப்படுகிறது.