திருமலை நாயக்கர் அரண்மனை கட்ட மணல் வேண்டி தோண்டியதால் ஏற்பட்ட பள்ளத்தைத் தெப்பக்குளமாக மாற்றியுள்ளனர். சுரங்கக் குழாய்களின் மூலமாக வைகையிலிருந்து தண்ணீர் கொண்டு வந்து தெப்பக்குளத்தில் சேர்க்கிறார்கள்.
திருமலை நாயக்கர் மகாலுக்காகத் தோண்டப்பட்ட தெப்பக்குளத்தைத் தோண்டும்போது கிடைத்தவர்தான் முக்குறுணி விநாயகர் என்று கூறப்படுகிறது.
வைகையின் வடகரையில், மண்டூக மகரிஷியின் சாபத்தைக் கள்ளழகர் போக்கியதால், மண்டியூர் என அழைக்கப்பட்டு பின்னர் மருவி வண்டியூர் என்றானதாகக் கூறப்படுகிறது.