தேவர்கள் யாகம் செய்யும்போது ஏற்பட்ட சில தவறுகள் காரணமாக, ஆட்டுக்கடா ஒன்று தோன்றி அனைவரையும் துன்புறுத்தியது. அதனை அடக்கிய முருகன் தனது வாகனமாக ஏற்றுக் கொண்டார்.
தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, தாணுமாலயன் - கன்னியாகுமரி திருமணத்தைத் தடுக்கும் வகையில், சேவல் வடிவம் கொண்டு "கொக்கரொக்கோ" எனக் கூவினார். திருமணம் தடைபட்டது. பின்னர் முருகன் இங்கு கோவில் கொண்டார் என ஸ்தல வரலாறு கூறுகிறது.