சுவாமி யோக நிலையில் இருக்கும்போது செய்யப்படும் குண்டலி அபிஷேக விபூதி, சகல சௌபாக்யம் தரவல்லது எனக் கூறப்படுகிறது.
சபரிமலையில் மகரஜோதி தெரியும் அதே நேரத்தில் இங்குள்ள சுவாமி சந்நிதானத்தின் நேர் எதிரில் கிழக்கு திசையில் மகர நட்சத்திர தரிசனம் கிடைக்கின்றது. சபரி மலையில் நடப்பது போலவே இங்கும் பூஜா முறைகள் பின்பற்றப்படுகின்றன.
சபரிமலை மேல்சாந்தியாக (1991ல்) இருந்த கே.சி.நாராயணன் நம்பூதிரி, இங்கு தந்திரியாக இருந்து வழி நடத்துகிறார்.