மைசூர் - பெங்களூரு மார்க்கத்தில், ஒன்பதாவது மைலில் காவிரி ஆறு இரண்டாகப் பிரிந்து, பின்னர் மூன்று மைல் தள்ளி இரண்டும் ஒன்று சேர்கின்றன. இதன் நடுவே அமைந்துள்ள தீவு ஸ்ரீரங்கப்பட்டணம்.
இதை 'ஆதிரங்கம்' எனக் கூறுகிறது காவேரி மகாத்மியம். பிரம்மாண்ட புராணமோ இதை 'பச்சிம ரங்கம்' என்கிறது. பச்சிம வாஹினி எனும் தீர்த்தக் கட்டத்திலிருந்து காவிரி இரண்டாகப் பிரியும் இவ்விடத்தை 'கௌதம க்ஷேத்ரம்' என்றும் குறிப்பிடுவர். இங்கு கௌதமரின் குகை ஒன்று இருந்ததாகவும், இங்கிருந்துகொண்டே ஸ்ரீ ரங்கநாதரை நித்ய ஆராதனை செய்து வந்தார் கௌதமர்.
காவேரி அன்னைக்கு பிரத்யட்சமான பெருமாள், அவளது வேண்டுகோளின்படி இங்கு பள்ளி கொண்ட கோலம் கொண்டதாக ஸ்தல வரலாறு தெரிவிக்கின்றது.
ஹைதர் அலியும், திப்பு சுல்தானும் ஸ்ரீ ரங்கநாதரை வழிபட்டுள்ளனர் என்றும், பல நன்கொடைகளை அளித்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
பஞ்ச ரங்க க்ஷேத்ரங்களுள் ஒன்று - ஆதி ரங்கம்.