ஜமதக்னியின் ஆஸ்ரமம் 1 கி.மீ. தூரத்திலுள்ளது. ஆஸ்ரமத்தினருகே, ஒன்பதடி உயரமுள்ள வீர ஆஞ்சநேயரும், பஞ்சமுக ஆஞ்சநேயரும், கோட்ட வரதராஜர் ஆகியோரின் திருவுருவங்களை சேவிக்கலாம்.
தெற்குபுறமாக உள்ள குன்றை குண்டலிபுரம் என்பர். இங்குள்ள சுப்ரமண்ய ஸ்வாமியின் கோவில் சாந்நித்யம் மிகுந்தது.
வள்ளி-தெய்வயானை உடனாய தேவசேனாதிபதி, இங்கு எழுந்தருளி அருள் புரிகின்றார். மயில் மேல் நின்ற கோலம் வித்தியாசமான தரிசனம்.
ரேணுகாம்பாள் கோவிலைச் சுற்றிலும் - லட்சுமி நரசிம்மர், கைலாஸ விநாயகர், சின்னகோட்டை வரதர், அம்மையப்பர் ஈஸ்வரி, வேணுகோபாலஸ்வாமி ஆகியோரின் கோவில்கள் உள்ளன.