தனக்கு என்று எந்த முக்கியத்துவமும் இல்லாததால்தான், தன்னை ராவணேஸ்வரன் சிம்மாசன படிகளில் போட்டு மிதிக்கின்றான் என வருத்தம் கொண்ட 'சனீஸ்வரர்', தானும் ராவணனைப் போல ஈஸ்வரன் பட்டம் பெற வேண்டும் என கயிலாயம் விரைகிறார்.
நீண்ட தவம் புரிந்துதான் ராவணனுக்கு ஈஸ்வரன் பட்டம் கிடைத்தது என நாரதர் மூலமாக அறிந்து கொண்டு, தானும் அவ்வாறே தவம் மேற்கொள்ள பூலோகம் வந்து, இந்த ஸ்தலத்தை தேர்ந்தெடுத்தார். இங்கு உள்ள ஒரு மண் குவியலுள் பாணலிங்கம் ஒன்று இருப்பதாக அசரீரி மூலமாக தெரிந்து கொண்டு, அதை வெளிக்கொணர்ந்து, பிரதிஷ்டை செய்து, வழிபட்டார்.
சனீஸ்வரரின் தவத்தினால் மகிழ்ந்த சிவபெருமான் பிரத்யக்ஷமாகி, அவர் கோரிய ஈஸ்வரப் பட்டத்தை தந்து ஆசி கூறினார்.