ஊழி வெள்ளத்தில் மிதந்து வந்த அமிர்த கும்பத்தைத் தாங்கி வந்த உறி வந்து விழுந்த இடத்தில் தோன்றிய லிங்கமே இங்கு மூலவராக தரிசனம் தருகிறது. சிக்கம் என்றால் 'உறி' என்று பொருள். இதனால் இறைவனுக்கு சிக்கேசர் எனப் பெயர் வந்தது.
சந்திரன் இவ்விறைவனை வழிபட்டு தனது சாபத்தைப் போக்கிக் கொண்டான். ஆதலால் சோமேசர் என்றும், பிரகஸ்பதி வழிபட்டதால் வியாழ சோமேஸ்வரர் என்றும் பெயர் வந்தது.