ஸ்தலத்தின் பெயர் அன்பில். கோவிலின் பெயர் ஆலந்துறை. இரண்டும் சேர்ந்து அன்பிலாந்துறை எனப்படுகிறது.
அன்பிலாந்துறை கொள்ளிடத்தின் வடகரையில் இருந்தது. திருக்கானூர் தரிசனத்தை முடித்துவிட்டு கொள்ளிடத்தின் தென்கரை வந்து சேர்ந்த ஞானசம்பந்தப் பெருமான், ஆற்று வெள்ளம் பிரவாகமாகப் போய்க்கொண்டிருப்பதைப் பார்த்து, கரையை கடக்க முடியாமல், இக்கரையிலிருந்தே பாடியுள்ளார்.
இவ்வாலயத்தையும் ஊரையும் சேர்த்தே பாடிய அந்த பதிகத்தை, ஆலயத்துக்குள்ளிருந்த பிள்ளையார் தலை சாய்த்து - செவி சாய்த்துக் கேட்டார் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
தேவாரத் திருத்தலம்.