பலாச வனத்திலுள்ள கோவில். திருமகளாகிய திரு இருந்து மங்கலம் பெற்றதால் திருவிருந்தமங்கலம் என்றும், லட்சுமி வழிபட்டதால் திருமங்கலம் என்றும் இவ்வூர் பெயர் கொண்டது.
தந்தையைக் கொன்ற பித்ருஹத்தி தோஷம் நீங்குவதற்காக, சண்டிகேஸ்வரர் இவ்விறைவனை வழிபட்டு தோஷம் நீங்கப் பெற்றார். தாயைக் கொன்ற மாத்ருஹத்தி தோஷம் நீங்குவதற்காக பரசுராமர் இவ்விறைவனை வழிபட்டு தோஷம் நீங்கப் பெற்றார். எனவே பித்ரு தோஷம் மற்றும் முன்னோர்களின் சாபங்களைப் போக்கவல்ல ஸ்தலம் என்பர். காசிக்கு போன பலனைத் தரும் க்ஷேத்ரம் என்பார்கள். கயாவில் உள்ளது போல் பல்குனி எனும் நதியை இங்கு ஸ்வாமியே உண்டு பண்ணியதாகக் கூறப்படுகிறது.
63 நாயன்மார்களில் ஒருவரான ஆனாய நாயனார் பிறந்து, முக்தி பெற்ற ஸ்தலம். தனது புல்லாங்குழல் இசையினால் வேத வியாசரின் பிரதான சீடரான ஜைமினி முனிவர் இத்தலத்தில்தான் சாம வேதத்தை, ஆயிரம் சாகைகளாகப் பிரித்து ஓதி இவ்விறைவனைப் பூஜித்தார். இதனால் இவ்விறைவன் ஸ்ரீ சாமவேதீஸ்வரர் எனும் திருநாமம் கொண்டார்.
தேவார வைப்புத்தலம்.